நெல்லை கண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்டது.
முன்னதாக நெல்லை கண்ணனின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க போலீஸாருக்கு ஆதரவாக வாதாட அரசு வழக்கறிஞர் எவரும் வரவில்லை. இதை அடுத்து, பாஜக., இந்துமுன்னணி வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நெல்லை கண்ணன் ஜாமீன் மனு விவகாரத்தில் மாலை 6 மணிக்கு உத்தரவு பிறப்பிப்பதாக நீதிமன்றம் கூறியது.
மாலை 6 மணிக்கு மேல் நீதிமன்றம் நெல்லை கண்ணன் ஜாமீன் மனுவை நிராகரித்தது. இது, பா.ஜ.க., இந்து முன்னணி வழக்கறிஞர்களின் சட்ட போராட்டத்திற்கு வெற்றி என்று இந்து முன்னணியினர் கூறினர்.
நெல்லை கண்ணனுக்கு வரும் ஜன. 13ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப் பட்டுள்ளது.