சென்னை:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக.,வின் இரு பிரிவினருக்கு இடையே மோதல் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று, ஆர் கே நகர் தொகுதி 38-வது வட்டம் நேதாஜி நகரில் வேட்பாளர் மதுசூதனன் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.
பிணத்தை வைத்து அரசியல் செய்வதாக ஓ.பி.எஸ் அணியினர் மீதும், பணத்தை வைத்து அரசியல் செய்வதாக சசிகலா அணியினர் மீதும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



