தென்காசியில் முதல்முறையாக … கொடியேற்றிய ஆட்சியர்! மாவட்டங்களில் குடியரசு தின கொண்டாட்டம்!

tenkasi collector - 2026

நாட்டின் 71வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப் பட்டு வருகிறது. இதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்ட தலைநகரங்களில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தனர்.

தமிழகத்தின் 33 வது மாவட்டமான தென்காசி மாவட்டத்தில் முதல் குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கொடி யேற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து காவலர்களுக்கு பாராட்டும் பரிசும் வழங்கிவைத்தார்

tenkasi collector police - 2026

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 71வது குடியரசு தின விழா கொண்டாட்டம் 71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேசியக் கொடி ஏற்றினர்.

tenkasi collector police award - 2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தேசியக் கொடியை ஏற்றி காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டு காவல்துறைக்கு பதக்கங்களை வழங்கியும், பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு சான்றுக்களை வழங்கினார்.

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

சென்னை : சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகமான சிங்காரவேலர் மாளிகையில் ஆட்சியர் சீதாலட்சுமி கொடியேற்றி வைத்து காவல்துறையினர் மற்றும் என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநரே தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

நாமக்கல் : நாமக்கலில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தேசியக் கொடி ஏற்றினார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகளுக்கு மரியாதை செய்தார்.

திருச்சி : திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தேனி: தேனியில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தேசியக் கொடி ஏற்றினார். தொடர்ந்து சமாதான புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கங்களையும் வழங்கினார்.

கடலூர்: கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தேசியக் கொடி ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தேசியக் கொடி ஏற்றினார். தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

புதுச்சேரி
புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, தேசியக் கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

திண்டுக்கல் :திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். தொடர்ந்து சமாதான புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார்.

ஈரோடு : ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

கோவை : கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விழுப்புரம் : விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

திருவள்ளூர் : திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து சமாதானப் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார்.

நெல்லை : நெல்லையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர் சதீஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மதுரை : மதுரையில் மாவட்ட ஆட்சியர் வினய் தேசியக் கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

நாகை : நாகையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செய்தார்.

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பதக்கங்களையும் வழங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories