விராலிமலை அருகே அதிசயம்: பசு ஒரே நேரத்தில் ஈன்ற இரண்டு கன்றுகள்

Published:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள நாங்குப்பட்டியில் விவசாயி வளர்த்த பசு ஒன்று வியாழக் கிழமை இரவு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது. இதை அதிசயத்துடன் மக்கள் பார்த்துச் செல்கின்றனர். நாங்குபட்டியைச் சேர்ந்த விவசாயி அய்யாக்கண்ணு வளர்த்து வந்த பசு மாடு இரண்டு ஆண் கன்றுகளை ஈன்றுள்ளது. இரண்டு கன்றுகளும் நல்ல நிலையில் துள்ளிக்குதித்து விளையாடுகிறது. இரண்டு கன்றுகளை ஈன்ற பசுவையும், கன்றுகளையும் நாங்குப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img