
திருச்சி:
திருச்சியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தன்னிடம் சூரிய மின்சக்தித் திட்டத்தில் அனுமதி வழங்க ரூ.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த திருச்சி குற்றவியல் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.



