இரண்டாவது நாளாக … ஊரடங்கால் முடங்கிய மதுரை!

madurai second day
மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும், மதுரை கோமதிபுரம் ஆறாவது மெயின் சாலை.

முழு ஊரடங்கால் இரண்டாவது நாளாக மதுரை முடங்கியுள்ளது. நாடு முழுதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு பிறப்பித்துள்ள முழு ஊரடங்கால், மதுரை மாநகரில் இரண்டாவது நாளாக மக்கள் நடமாட்டம் இன்றி வீடுகளுக்குள் முடங்கினர்.

மதுரை கருப்பாயூரணி, சிலைமான், விரகனூர், தெப்பக்குளம், கோமதிபுரம், வண்டியூர், சிம்மக்கல், கோரிப்பாளையம், கோச்சடை, பழங்காநத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலை முதலே சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மதுரை நகரில் புறப்பகுதிகளான கோமதிபுரம், மேலமடை, கருப்பாயூரணி, புதூர், சர்வேயர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சில்லறை காய்கறிகள் வண்டிகள், சைக்கிளில் பால் விற்பனை செய்பவர்களை மட்டும் போலீஸார் அனுமதித்தனர். சில்லறை மற்றும் பெரிய அங்காடிகளையும், பெட்டிக்கடைகளையும், இதர கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை. பல தெருக்களில் திறந்திருந்த சிறிய காய்கறிக் கடைகளை போலீஸார் எச்சரித்து மூட வைத்தனர்.

madurai second day1
கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், மதுரை ஜூப்பிலி டவுனுக்கு செல்லும் சாலை.

புகை பிடிப்போர், புகைக்க கடைகளை தேடி அலைந்ததை காணமுடிந்தது. கோமதிபுரம், மேலமடை பகுதிகளில் மாநகராட்சி சார்பில் இயங்கும் நடமாடும் காய்கறி வண்டிகளும் வரவில்லை.

மதுரை நகரில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப் பட்டது. அதே நேரம் மதுரை புறநகர் பகுதிகளான சோழவந்தான், வாடிப்பட்டி, தேனூர், தென்கரை, முள்ளிப்பள்ளம், குருவித்துறை, சிறுவாலை, அம்பலத்தடி, மணியஞ்சி, குமாரம் ஆகிய பகுதிகளில் கொரோனா தாக்கம் குறைவால் சிறிய மற்றும் பெட்டிக்கடைகள் அதிகாலை மட்டும் செயல்பட்டன.

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை, மேலூர், திருமங்கலம், கீழமாத்தூர், பரவை, விளாங்குடி, ஏழுமலை தவிர பல கிராமங்களில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

கிராமங்களில் அதிகம் பேர் சுய கட்டுப்பாட்டை கடைப் பிடிப்பதால், இந்த நோயின் தாக்கம் குறைவாக இருக்கக் காரணம் என்கின்றனர். மதுரை நகரில் வெளியே செல்பவர்கள் எவராக இருந்தாலும் முக கவசம் இல்லாமல் சென்றால் கடும்நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரிக்கப் பட்டுள்ளனர்.

  • செய்தியாளர்: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

Topics

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories