சொந்த மாநிலத்தவரையே அடித்துத் துரத்திய கேரள போலீஸ்: உணவளித்து காப்பாற்றும் தமிழக போலீஸ்!

sengottai police help kerala man1

தமது மாநிலத்தைச் சேர்ந்த நபரையே மாநிலத்துக்குள் புக விடாமல், அடித்துத் துரத்தியுள்ளனர் கேரள மாநில போலீஸார். ஆனால் வெகு தொலைவு நடந்து வந்த அந்த நபரை தமிழக போலீசார் இருக்க இடம் கொடுத்து பசிக்கு உணவும் அளித்து காப்பாற்றினர். மனதை உருக்கும் இந்தச் சம்பவம், தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் நடைபெற்றுள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் உள்ள புளியரை சுங்கச்சாவடிக்கு சோர்வாக நடந்து வந்துள்ளார் ஓர் இளைஞர். அவரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது அவர், தமக்கு திருவனந்தபுரம் பகுதியில் பூந்துரா, மாணிக்யவிளாகம்தான் சொந்த ஊர் என்றும், தமது பெயர் நௌஷத் என்றும், 35 வயதான தமது தந்தை பெயர் பஷி பாய் என்றும் கூறியுள்ளார்.

kerala man in kottavasal

தாம் தமது நண்பருடன் நாகர்கோவில் வழியே கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும் கூறியுள்ளார். அப்படி வந்த போது, கேரளத்தில் இருந்து எந்த அனுமதியும் பெறாமல் சாதாரணமாக எப்போதும் வருவது போல் வந்ததாகக் கூறியுள்ளார்.

அவர் குறித்த விவரங்கள், அவரது அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்தையும் சரிபார்த்த பின்னர்,அவரை கேரளத்துக்குச் செல்ல தமிழக போலீஸார் அனுமதித்துள்ளனர். இதை அடுத்து அவர் ஆரியங்காவு வழியாக கேரளம் நோக்கிச் சென்றுள்ளார்.

kerala man in kottavasal1

ஆனால், அவரை கேரள மாநில எல்லைக்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை. அவரை வனத்துறையினரும் ஆரியங்காவு சோதனைச் சாவடி போலீசாரும் அடித்ததுடன், கேரளத்துக்குள் அனுமதிக்காமல் துரத்தி அடித்துள்ளனர். இதை அடுத்து மீண்டும் அவர் தாம் வந்த மலைப் பாதை வழியிலேயே தமிழகத்துக்கு திரும்பியுள்ளார். பின்னர், தமிழக எல்லையில் மலை மேல் உள்ள கோட்டைவாசல் கருப்பசாமி கோயிலில் அவர் தங்கியுள்ளார்!

சோதனைக்காக சென்ற தென்காசி மாவட்ட போலீஸார் அவரைக் கண்டு மீண்டும் விசாரித்து அவரது நிலையைக் கண்டு மனமிரங்கி, மலை அடிவார கிராமத்தில் இருந்து உணவு வாங்கிச் சென்று கொடுத்து உதவினர். இந்த விஷயத்தில் மனிதாபிமான அடிப்படையில் அந்த நபருக்கு உதவ வேண்டும் என்று கோரினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Entertainment News

Popular Categories