கொரோனா: தென்காசியில் மேலும் 3 பேர் குணம்!

Published:

corono

தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 38 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில், ஏற்கெனவே 6 பேர் குணமடைந்தனர்.

இந்நிலையில், புளியங்குடியைச் சேர்ந்த மேலும் 3 பேர் குணமடைந்தனர். அவர்கள் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 6 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. நன்னகரம் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட நிலையில், புளியங்குடியும் மெல்ல விடுபட்டு வருகிறது.

தற்போது 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related articles

Recent articles

spot_img