December 6, 2025, 10:32 AM
26.8 C
Chennai

திருப்பூரை அச்சுறுத்தும் மத அடிப்படைவாத கும்பல் மீது நடவடிக்கை தேவை: இந்து முன்னணி!

tiruppur protest1
tiruppur protest1

திருப்பூரை அச்சுறுத்தும் மத அடிப்படைவாத கும்பல் மீது நடவடிக்கை தேவை என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்…

தொழில் நகரமான திருப்பூர் தற்போது கொரானா பாதிப்பில் சிவப்பு மண்டலமாக இருந்து வருகிறது. இது பச்சை மண்டலமாக மாறும் போதுதான் திருப்பூர் சகஜ நிலைக்கு திரும்பும்.

பச்சை மண்டலமாக மாற்றுகின்ற பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அரசுக்கும் காவல்துறைக்கும் ஒவ்வொரு குடிமகனும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரானா தொற்றை முற்றிலுமாக தடுக்க முடியும்.

கடந்த 40 நாட்களாக கோவில்கள் பூட்டப்பட்டிருக்கிறது. எந்தக் கோவிலிலும் வழிபாடுகள் நடைபெறுவது இல்லை. மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கைவிடப்பட்டுள்ளது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் கைவிடப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க திருப்பூர் பெரிய தோட்டம் கொரானா தொற்று அதிகம் இருக்கின்ற பகுதியாக இருப்பதால் அந்தப் பகுதி அரசு அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

tiruppur protest
tiruppur protest

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மத அடிப்படைவாதிகள் ஒன்று ஒன்று சேர்ந்து ரம்ஜான் நோன்பு இருக்கிறோம் எனவே கடைகளைத் திறக்க வேண்டும் என அதிகாரிகளை மிரட்டி கடை திறந்து கூட்டத்தை சேர்த்துள்ளனர், கடையை அடைக்க சொன்ன காவல்துறையை கண்டித்து 300 பேர் கூட்டமாய் சேர்ந்து இரண்டு மணி நேரம் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதேபோல் மங்கலத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக இந்த மத அடிப்படைவாத கும்பல் மறியல் செய்ததையும் அனைவரும் அறிந்ததே. திருப்பூர் ஒரு மிகப்பெரிய பனியன் உற்பத்தி நகரம் இந்தத் தொழிலை நம்பி பல லட்சக்கணக்கான வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் திருப்பூரில் உள்ளனர். இதேபோல் தொழில் முனைவோர் பல கோடிக்கணக்கில் பனியன் தொழிலில் முதலீடு செய்துள்ளனர்.

இந்த நகரில் பனியன் உற்பத்தி தொடங்கினால்தான் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும், ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்கள் உணவு உண்ண முடியும். இந்த நெருக்கடியான நிலையில் லட்சக்கணக்கான பொதுமக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். ஆனால் மத அடிப்படைவாத கும்பல் ஒன்று ஆங்காங்கே கூட்டங்களை சேர்த்து மதத்தின் பெயரால் கொரானா பரவும் வாய்ப்பை உருவாக்கி வருகிறது.

tiruppur protest2
tiruppur protest2

இந்துக்கள் வெளியில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றால் உடனே வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்,
முஸ்லீம்கள் கொரோனா பரப்பும் வகையில் ஒன்று கூடினால், அவர்கள் மீது பெயருக்கு வழக்குப்பதிவு செய்து அதோடு கிடப்பில் போட்டுவிட்டு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இதனால் ஊக்கம் பெற்ற மதவெறி கும்பல் தினம்தோறும் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகிறது. இதுபோன்ற போராட்டங்கள் நடத்திய எவரையும் காவல்துறை கைது செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதுபோன்ற போராட்டங்களால் இத்தனை மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பது வீணாகப் போய்விடும் அரசின் அத்தனை நடவடிக்கைகளும் வீணாகப் போய்விடும் இதை அரசும் காவல்துறையும் உணரவேண்டும். அரசின் விதிமுறைகளை மீறி கடை திறப்பது மற்றும் போராட்டங்கள் நடத்துபவர்களை கைது செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அரசின் நடவடிக்கை வெற்றியடையும்.

திருப்பூர் பழைய நிலைக்கு திரும்பவும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் இந்த மத அடிப்படைவாத கும்பலை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது… என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories