December 6, 2025, 10:56 PM
25.6 C
Chennai

ஊரடங்கு உத்தரவு நேரத்தில்… கரூர் அருகே பெரும் சாலை விபத்து!

karur accident omni bus hits lorry 25 injured
சுற்றுலா பேருந்தும், தண்ணீர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் காயம் அடைந்தனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கும் நேரத்தில் தமிழக அளவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சுற்றுலா பேருந்தும், தண்ணீர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் காயம் அடைந்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், மாணவர்கள் கொரனோ தொடர்பாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதால் வீடு திரும்ப முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில் கேரளா மாநிலம் கோட்டயத்தை சார்ந்த 25 பேர் சுற்றுலா பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்து, அதற்கான ஈ-பாஸ் வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். சுற்றுலா பேருந்து கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் அருகே ராம் நகர் பிரிவு அருகே வந்த போது சாலையை கடக்க முயன்ற தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரண்டு வாகனமும் சாலையோரத்தில் மோதி நின்றது. இதனால் பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சுற்றுலா பேருந்தில் பயணம் செய்த 24 பயணிகளையும், ஓட்டுநரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பயணம் செய்தவர்கள் அனைவரும் கேரள மாநிலம் கோட்டயத்தை சார்ந்தவர்கள் என்று கூறப்படுக்கிறது. கரூர் மாவட்டத்தில் கொரனோ ஊரடங்கு உத்தரவிற்குப் பிறகு நடந்த முதல் சாலை விபத்து இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories