April 28, 2025, 7:32 AM
28.9 C
Chennai

நடமாடும் 5 அதிநவீன எக்ஸ்ரே வாகனங்கள்! தொடங்கி வைத்த முதல்வர்!

சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை பரிசோதனை செய்வதற்கான 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா சிக்கியுள்ளதால் நாளுக்கு நாள் பாதித்தோர் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

குறிப்பாக கொரோனா வைரஸின் கூடாரமாக அமைந்துள்ள தமிழகம், நாட்டிலேயே பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் 3ம் இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் பரிசோதனைகள் மிகவும் ஆமை வேகத்தில் நடக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

போதுமான பரிசோதனை கருவிகள் இல்லாததால் சோதனை முடிவுகள் தாமதமாகிறது. கொரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்ய பி.சி.ஆர். ( பாலிமரேஸ் செயின் ரியாக்சன்) சோதனை நடத்தப்படுகிறது.

இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் தொண்டை, மூக்கில் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு தொற்று உள்ளதா என்று கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த சோதனை முடிவை அறிய 48 மணி நேரம் ஆகும். இந்நிலையில், பரிசோதனையை விரைவுபடுத்த கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை பரிசோதனை செய்வதற்கான 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ALSO READ:  மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

ரூ.5.48 கோடி மதிப்பில் மொத்தமாக 14 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 9 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளன.

நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களின் சிறப்புகள்

நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் மூலம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளியின் அளவை கண்டறிய முடியும்.

கொரோனா நோய் தொற்று அறிகுறி இல்லாமல் உள்ளவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்படும்.

2 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகள் தெரிந்துவிடும் வகையில் நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

Entertainment News

Popular Categories