June 14, 2025, 7:41 AM
28.8 C
Chennai

கோயில்ல பாட்டு ஒலிக்கணும்னாக்கூட போராட வேண்டியிருக்கு! எல்லாம் தமிழ்நாட்லதான்… அதுவும் தெய்வத் தமிழ் வளர்த்த நெல்லையில்தான்!

nellai temple protest

நெல்லை மாநகர் பகுதிகளில் கொரோனா தடை உத்தரவு காலத்தில் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் நெல்லையப்பர் திருக்கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் தினமும் காலையில் ஒலிக்கும் தேவார திருவாசக ஆன்மீக பாடல்கள் ஒலிபரப்ப காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் திடீரென தடை விதித்துள்ளது.

குறிப்பிட்ட ஒரு மதத்தினர் வழிபாட்டுத் தலங்களில் மட்டும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளில் ஒலிபரப்ப அனுமதி வழங்கப்படும் நிலையில், இந்து ஆலயங்களில், அதுவும் அரசின் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆலயங்களில், பக்தர்களின் மனம் புண்படும் வகையில் இவ்வாறு ஒலிபரப்பு நிறுத்தப் பட்டது நெல்லை வாழ் அன்பர்களிடம் பெரும் மன வேதனையை அளித்தது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் நெல்லை மாநகர காவல்துறையின் மதரீதியான இந்த பாரபட்சமான நடவடிக்கையை கண்டித்தும், பிற மத வழிபாட்டுத் தலங்களை போல் இந்து ஆலயங்களில் பக்தி இசையினை ஒளிபரப்ப அனுமதி வழங்க வலியுறுத்தியும், நெல்லை டவுன் நெல்லையப்பர் திருக்கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜசெல்வம் மற்றும் *நமச்சிவாயம் ஆகியோர் உரிய சமூக இடைவெளி விட்டு நான்குபேர் நேற்று சட்டப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் உட்பட நான்கு பேரும் கைது செய்யப்பட்டு டவுன் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டனர்.

இந்நிலையில், இந்துமுன்னணியின் நேற்றைய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும், மீண்டும் இன்று காலை நெல்லையப்பர் கோவிலில் பாடல்கள் ஒலித்தன என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் கா.குற்றாலநாதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

அகமதபாதில் விமானம் விழுந்து பயங்கர விபத்து!

அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல உத்தரவிட்டார்.

Topics

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

அகமதபாதில் விமானம் விழுந்து பயங்கர விபத்து!

அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல உத்தரவிட்டார்.

பெண்களை ‘ஓஸி’ என கேலி பேசும் திமுக.,வினர் இனி வெட்டியாக வீட்டில் அமர்வார்கள்!

வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? மத்திய நிதி அமைச்சகம் சொல்வது என்ன?

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என்று, மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. செய்தி ஊடகங்களின் தவறான தகவல்களுக்கு

பஞ்சாங்கம் ஜூன் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories