கூகுள் பே மூலம் பண மோசடி செய்த இளைஞன்!

google pay

சிறு கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை, தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறியுள்ளது. கூகுள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மூலமும் , பல்வேறு வங்கிகளின் டிபிட், கிரெடிட் கார்டுகள் மூலமும் வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்தி வருகின்றனர்.

இதில் ஒரு சிலர் நூதன முறையில் பணமோசடி செய்திடும் சம்பவங்களும் ஒரு சில இடங்களில் அரங்கேறி வருவதும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கோவையில் ரத்தினபுரி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த இளைஞர் செல்வ விஷ்ணு என்பவர் ,

கடந்த சில தினங்களுக்கு முன்பு காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல செல்போன் கடைக்கு சென்று, 5000 ரூபாய் மதிப்புள்ள ஹோம் தியேட்டர் மற்றும் ஸ்பீக்கர் உள்பட சில பொருட்களை வாங்கியுள்ளார்.

பின்னர் அதற்குரிய தொகையை கூகுள் பே மூலம் செலுத்திய செல்வ விஷ்ணு, பணம் செலுத்தியதற்கான ரசீதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கடை உரிமையாளரிடம் காட்டி விட்டு பொருட்களை எடுத்து சென்றுள்ளார்.

இந் நிலையில் இதே கடைக்கு மீண்டும் சென்ற செல்வவிஷ்ணு, இம்முறை 50ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் வழக்கம் போல், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி விட்டதாகவும் தெரிவித்து வழக்கம் போல் ஸ்கிரீன்சாட்டை காட்டியுள்ளார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

ஆனால் செல்போனுக்குரிய பணம் கடையின் வங்கி கணக்கு வராததால் குழப்பமடைந்த கடை ஊழியர் செல்வ விஷ்ணுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே அக்கடையின் மற்றொரு கிளையிலும் சிறிது நேரத்திற்கு முன்பு இதே போன்ற பிரச்னை ஏற்பட்டதை உறுதி செய்துகொண்ட கடை ஊழியர்கள் , சந்தேகத்தின் பெயரில் காட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞர் செல்வ விஷ்ணுவிடம் நடத்திய விசாரணையில், ஏற்கனவே மற்றொரு கடையில் 8000 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கியதற்கான ரசீதில் திருத்தம் செய்து, நூதன பணமோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து செல்வ விஷ்ணுவை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், இதே பாணியில் பல்வேறு கடைகளிலும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், செல்வ விஷ்ணுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories