திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்பத் தகராறில் தனது மனைவியைக் கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் போலீஸில் சரண் அடைந்தார். நெல்லை இந்திரா நகரைச் சேர்ந்த அன்பரசு ஆட்டோ ஓட்டுநராகத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பொன்னீஸ்வரி(26). இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அன்பரசு, பொன்னீஸ்வரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
நெல்லை: குடும்பத் தகராறில் மனைவியைக் கொன்று ஆட்டோ ஓட்டுநர் சரண்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

