திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்பத் தகராறில் தனது மனைவியைக் கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் போலீஸில் சரண் அடைந்தார். நெல்லை இந்திரா நகரைச் சேர்ந்த அன்பரசு ஆட்டோ ஓட்டுநராகத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பொன்னீஸ்வரி(26). இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அன்பரசு, பொன்னீஸ்வரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
Popular Categories



