வரதட்சணை கொடுமை! இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

priyanka - 2026

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பிரியங்காவுக்கு 24 வயதாகிறது. எம்பிஏ பட்டதாரி. இவருக்கும், காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் கல்யாணம் நடந்தது.

நிரேஷ் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். மேட்ரிமோனியல் மூலமாகத் தான் இந்த பெண்ணை பார்த்து இந்த கல்யாணம் நடந்துள்ளது. 2 மாதம் தான் தம்பதி சந்தோஷமாக இருந்திருப்பார்கள்.

ஏதேதோ காரணங்களாக வீட்டில் சண்டை வெடிக்க ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் பிரியங்கா தன்னுடைய அம்மா வீட்டுக்கே துரத்தி அடிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடுராத்திரி பிரியங்கா தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்த பிரியங்கா சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையையும் ஆரம்பித்தனர். அப்போதுதான், இது வரதட்சணை பிரச்சனை என்று தெரியவந்தது.

கல்யாணத்துக்கு 140 சவரன் பெண்ணுக்கு நகை போடுவதாக, பெண் வீட்டார் சொல்லி உள்ளனர். ஆனால் 40 சவரன் நகை மட்டுமே போட்டதாகவும் , அதனாலேயே ரெண்டு வீட்டாருக்கும் அடிக்கடி பிரச்னை நடந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தி , பிரியங்காவை அம்மா வீட்டிற்கே துரத்தி விட்டதாகவும் தெரிகிறது. இதனால் கல்யாணமாகி 2 மாசத்திலேயே தாய் வீடு சேர்ந்தார் பிரியங்கா. வந்த நாளில் இருந்து அழுது கொண்டே இருந்திருக்கிறார்.

நகையை எப்படியாவது போட்டுவிடுகிறோம் என்று நிரேஷ் வீட்டினரிடம் பிரியங்காவின் பெற்றோர் சொல்லி உள்ளனர்.. சமாதானமும் செய்து வந்துள்ளனர். ஆனால் நிரேஷ் வீட்டில் உடனடியாக எல்லா நகையும் வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.

இதனால் நேற்று முன்தினமெல்லாம் கதறி கதறி அழுது கொண்டிருந்திருக்கிறார் பிரியங்கா. நள்ளிரவில் மன உளைச்சல் தாங்காமல் தன் ரூமிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வளவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதையடுத்து, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் நிரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரித்து வருகின்றனர். கல்யாணம் ஆகி ஒரு வருடம்கூட ஆகாத நிலையில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், ஆர்டிஓ விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories