February 22, 2026, 5:41 PM
29 C
Chennai

மருத்துவ படிப்பு கனவு கலைந்த விரக்தி: நீட் எதிர்த்த மாணவி அனிதா தற்கொலை!

நீட் தேர்வை எதிர்த்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் மாநில பாடத்திட்டத்தில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவம் படிக்க முடியாத விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அரியலூர் மாவட்டம் செந்துரையை அடுத்த குழுமூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றிருந்தார். மாணவியின் தந்தை கூலித் தொழிலாளி. திருச்சி காந்தி சந்தையில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வந்தார். அனிதாவுக்கு மருத்துவப் படிப்பு படிக்கவேண்டும் என்பது வாழ்நாள் லட்சியமாக இருந்துள்ளது. அனிதா 196.5 கட்டாஃப் மதிப்பெண் பெற்றிருந்தார். நீட் தேர்வில் 720 க்கு 86 மதிப்பெண் எடுத்ததால் மருத்துவப் படிப்பு கிடைக்கவில்லை. இதனால் நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் வழக்கு தொடுத்தனர். அவர்களில் மாணவி அனிதாவும் ஒருவர்.

ஆனால், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடந்ததால், மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காத மாணவி அனிதா விரக்தி அடைந்தார். தன் கனவு தகர்ந்து போனதாகக் கூறிய அவர், அக்ரி படிப்பை படிக்க இருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், திடீரென அவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்பதால் அனிதா மன உளைச்சலில் இருந்தார் என்றும், அனிதாவின் மரணம் அவரது பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, மாணவி அனிதா தற்கொலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இது போன்ற சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபட கூடாது என்று கூறினார்.

ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கூறுகையில், அனிதாவின் தற்கொலையை நினைவில் கொண்டு மத்திய அரசு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறுகையில், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய – மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம். அனிதாவின் மரணம் தற்கொலை அல்ல. நீட் விலக்குக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டார் என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories