December 6, 2025, 10:52 AM
26.8 C
Chennai

இறைதூதர் என்று கூறி பெண்ணிடம் பாலியல் கொடுமை நகை பணம் பறித்த மதபோதகர்!

matharasa 1 - 2025

இறைத்தூதர் என்று கூறி பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய காமுகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சியில் உள்ள கே.கே நகர் பகுதியை சார்ந்த பெண்மணி வயது 30 இவர் திருச்சி கண்டோமென்ட் காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார். இது குறித்த புகாரில், ” திருச்சியில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் தெரு பகுதியை சார்ந்தவன் பரூக்.

இவன் எனக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக அறிமுகமானான். தன்னை மதபோதகர் என்று கூறி அறிமுகம் செய்த நிலையில், சில வாரங்கள் கழித்து மத ரீதியான வகுப்புகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், தன்னை இறைத்தூதர் என்று கூறி தான் சொல்வதை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மத ரீதியான வகுப்புகள் என்ற பெயரில் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இதுமட்டுமல்லாது ரூ.50 இலட்சம் மதிப்புள்ள 80 பவுன் நகைகள், ரூ.10 இலட்சம் ரொக்கம் பணத்தையும் மிரட்டி பெற்றுக்கொண்டார்.

இதன்பின்னரும் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார். இந்த விஷயத்திற்கு உடந்தையாக பரூக்கின் மனைவி மற்றும் உறவினர் உடந்தையாக உள்ளனர். அவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எனது வாழ்க்கையை காப்பாற்றுங்கள் ” என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறைத்தூதர் என்ற பெயரில் அத்துமீறிய காமுகன் பரூக்கை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவனுக்கு உடந்தையாக இருந்த பரூக்கின் மனைவி மற்றும் உறவினரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories