மருத்துவ மாணவி இறப்பிற்கு தடுப்பூசி காரணமில்லை: மதுரை மருத்துவமனை!

harini - 2026

கொரோனா தடுப்பூசி போட்ட மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவி கடந்த வாரம் உயிரிழந்ததற்கும், தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் சம்பந்தம் இல்லை என மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மதுரை மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தவர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஹரிஹரிணி (26). இவர் பிப்.5-ல் கொரோனா தடுப்பூசி போட்டார். கடந்த வாரம் அவருக்கு உடல் வலியும், காய்ச்சலும் ஏற்பட்டது. அவரது கணவரும் அதே கல்லூரியில் படிக்கிறார். அவர் மனைவிக்கு வலி நிவாரண ஊசி போட்டார். ஆனால், உடல்நிலை மோசமாகி மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

தடுப்பூசி போட்ட பிறகு அந்த மாணவி வலி நிவாரண ஊசி போட்டதாலேயே இறந்ததாக அவரது மரணம் குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி போட்டவர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை மருத்துவக் கல்லூரி டீன் சங்குமணி கூறியதாவது:

மாணவி ஹரிஹரிணி கொரோனா தடுப்பூசி போட்ட ஒரு மாதம் கழித்து இறந்தார். அவரது மரணத்துக்கும், தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் சம்பந்தம் இல்லை. அதற்கான ஆவ ணங்கள் எங்களிடம் உள்ளன.

மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளோம். நாங்கள் நலமாக உள்ளோம். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.

சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜூன்குமார் கூறியதாவது: மாணவி எடுத்துக் கொண்டதாகக் கூறப்படும் வலிநிவாரண தடுப்பூசியை சுகாதாரத் துறையில் தடை விதித்துள்ளோம்.

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள், பொதுவாக வலி நிவாரண ஊசிகளை தவிர்க்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories