ஆக்ஸிமீட்டரின் விலையும், விற்பனையும் அதிகரிப்பு!

pulse oximeter
pulse oximeter

வீட்டில் தனிமையில் இருந்து, கொரோனா சிகிச்சை மேற்கொள்வோர் எண்ணிக்கை, அதிகரித்து வருவதால், உடலில் ஆக்சிஜன் அளவை அறிய உதவும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் விற்பனையும், கோவையில் அதிகரித்துள்ளது.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

தற்போது கொரோனா இரண்டாம் அலையில் பலருக்கு, ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படுவதால், உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.

எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும், கொரோனா அறிகுறிகளுடன், பரிசோதனை முடிவுக்காக காத்திருப்போரும், அடிக்கடி ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டுமென, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதனால், மருத்துவமனைகளில் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வந்த ஆக்ஸி மீட்டர்கள், தற்போது வீட்டு முதலுதவி பெட்டியின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. கொரோனா லேசான பாதிப்புள்ள ஆயிரக்கணக்கான பேர், வீட்டில் தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, அபரிமிதமாக குறைந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.இல்லையெனில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை மோசமாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதனால், தொற்று ஏற்பட்டு வீட்டில் சிகிச்சை பெறும் அனைவரும், இக்கருவியை வாங்கி வைத்தாக வேண்டிய நிலை உள்ளது. இதனால், இதுவரை ஆக்ஸி மீட்டர் பற்றி அறிந்திராத பலரும், தற்போது அதனை வாங்க ஆர்வம் காட்டி வருவதால், அதன் விற்பனை, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு முன் இருந்ததை விட, கோவை மாவட்டத்தில் தற்போது, 25 முதல் 30 சதவீதம் வரை, விற்பனை அதிகரித்துள்ளது.

தட்டுப்பாடு உள்ளதால், ஆக்ஸி மீட்டர்களின் விலையும், 35 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக, மருந்தக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.’

தட்டுப்பாடு கிடையாது’கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்க தலைவர் கருப்பையா கூறுகையில், ”மாவட்டத்தில் கொரோனா பரவலுக்கு முன், ஆக்ஸி மீட்டர் விற்பனை குறைவாக இருந்தது. விலையும்குறைவாக இருந்தது.

தற்போது மக்கள் பலர் பயன்படுத்த துவங்கி விட்டனர். விற்பனை அதிகரித்துள்ளதால் விலையை, 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளனர்.

கோவைக்கு பெரும்பாலும் வெளிநாட்டு ஆக்ஸி மீட்டர்கள் தான் வருகின்றன. தற்போது தேவை அதிகரித்துள்ளதால், 200 முதல் 300 ரூபாய் வரை அதிகரித்து விற்கப்படுகிறது.

கோவையில் ஆக்ஸி மீட்டர்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. அனைத்து மருந்து கடைகளிலும் இருப்பு உள்ளது,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Topics

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Entertainment News

Popular Categories