December 6, 2025, 5:56 AM
24.9 C
Chennai

கொரோனா பரவும் அபாயம்! இ-பதிவால் ஏற்பட்ட கூட்டநெரிசல்!

crowd
crowd

இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்ட நிலையில், சென்னையில் வாகன ஓட்டிகள் சோதனைக்காக நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. சில தளர்வுகளையும் அண்மையில் அறிவித்தது.

அதன்படி, பொதுமக்கள் அநாவசியமாக வெளியே செல்வதை தடுக்க இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டம் – மாவட்டம் செல்ல, இ-பாஸ் முறைக்கு பதிலாக இ-பதிவு முறை கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறை நேற்று முதல் அமலுக்கு வந்ததுள்ளது.

அத்தியாவசியப் பணிகளான திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை ஆகிய பணிகளுக்கு மட்டுமே, eregister.tnrga.org என்ற இணையபக்கத்தில் உரிய ஆவணங்களை சமர்பித்து இ-பதிவு மூலம் அனுமதி பெற்று பயணம் மேற்கொள்ளலாம்.

இதனிடையே, இ-பதிவு நடைமுறைக்காக சென்னையை 348 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல இ-பதிவு முறை அவசியம் என்று சென்னை மாநகர காவல்துறை நேற்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணி முதலே போலீசார் வாகன கண்காணிப்பில் ஈடுபட ஆரம்பித்தனர். இதற்காக, பல்வேறு இடங்களில் வாகன சோதனை சாவடிகளை அமைத்து, இ-பதிவு விபரங்களை ஆய்வு செய்ய தொடங்கினர். இதனால், சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஏற்கனவே, கொரோனா பரவல் உச்சகட்டத்தில் இருந்து வரும் நிலையில், இந்த இ-பதிவு முறையினால் ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசல், மேலும் கொரோனா தொற்று பரவலை அதிகரிக்கும் சூழலை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories