December 6, 2025, 4:48 AM
24.9 C
Chennai

பக்கத்தில் வசிப்பவர்களை தாக்கி கத்தியுடன் ரவுடி ரகளை!

kovai
kovai

கோவையில் ரவுடி ஒருவர் மதுபோதையில் பட்டா கத்தியுடன் பக்கத்து வீட்டில் வசிப்பர்களை தாக்க முயற்சிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சிங்காநல்லூர் அடுத்த மசகாளிபாளையம் முல்லை நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். பிரபல ரவுடி என கூறப்படும் இவர், அந்த பகுதியில் அவ்வப்போது மதுபோதையில் பயங்கர ஆயுதங்களுடன் தகராறு செய்து, அங்கிருக்கும் வாகனங்களை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அவரது அடாவடி செயல்களால் அந்த பகுதி மக்கள் தொல்லைபட்டு வந்த நிலையில், ரவுடி மணிகண்டனை தட்டிக்கேட்க முடிவு செய்துள்ளனர்.

நேற்று காலை மணிகண்டனின் வீட்டுக்கு எதிரே உள்ளவர்கள், அவரது அராஜகத்தை தட்டிக்கேட்டு உள்ளனர்.

அப்போது, கற்களை கொண்டு கேட்டை உடைத்து மணிகண்டன் தாக்க முயற்சித்தார். மேலும், அதனை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவர் போலீசுக்கு தகவல் அளிப்பதாக எச்சரித்த நிலையில், ஆத்திரமடைந்த மணிகண்டன் பட்டாக் கத்தியை கொண்டு, அந்த இளைஞரின் வீட்டிற்கே சென்று தாக்க முற்பட்டார்.

மேலும், அவரது வீட்டின் கேட்டை ஏறி குதிக்க முயன்றபோது, அங்கிருந்த பெண் எச்சரித்ததால் அந்த முயற்சியை கைவிட்டு உள்ளார். தொடர்ந்து, தெருவில் நின்று தகராறில் ஈடுபட்டதால், பயத்தில் பலரும் வீடுகளுக்குள் சென்றுவிட்டனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற சிங்காநல்லூர் போலீசார், மணிகண்டனை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், கடந்த 1 வாரமாக அவரது தாயாரை அடித்து துன்புறுத்தியதும், அதன் காரணமாகவே தெருவில் உள்ளவர்களுடன் தகராறு செய்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து, போலீசார் அவரை நீலாம்பூர் பகுதியில் உள்ள மனநல மருத்துவமமைனக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே மணிகண்டன் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories