பக்கத்தில் வசிப்பவர்களை தாக்கி கத்தியுடன் ரவுடி ரகளை!

kovai
kovai

கோவையில் ரவுடி ஒருவர் மதுபோதையில் பட்டா கத்தியுடன் பக்கத்து வீட்டில் வசிப்பர்களை தாக்க முயற்சிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சிங்காநல்லூர் அடுத்த மசகாளிபாளையம் முல்லை நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். பிரபல ரவுடி என கூறப்படும் இவர், அந்த பகுதியில் அவ்வப்போது மதுபோதையில் பயங்கர ஆயுதங்களுடன் தகராறு செய்து, அங்கிருக்கும் வாகனங்களை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அவரது அடாவடி செயல்களால் அந்த பகுதி மக்கள் தொல்லைபட்டு வந்த நிலையில், ரவுடி மணிகண்டனை தட்டிக்கேட்க முடிவு செய்துள்ளனர்.

நேற்று காலை மணிகண்டனின் வீட்டுக்கு எதிரே உள்ளவர்கள், அவரது அராஜகத்தை தட்டிக்கேட்டு உள்ளனர்.

அப்போது, கற்களை கொண்டு கேட்டை உடைத்து மணிகண்டன் தாக்க முயற்சித்தார். மேலும், அதனை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவர் போலீசுக்கு தகவல் அளிப்பதாக எச்சரித்த நிலையில், ஆத்திரமடைந்த மணிகண்டன் பட்டாக் கத்தியை கொண்டு, அந்த இளைஞரின் வீட்டிற்கே சென்று தாக்க முற்பட்டார்.

மேலும், அவரது வீட்டின் கேட்டை ஏறி குதிக்க முயன்றபோது, அங்கிருந்த பெண் எச்சரித்ததால் அந்த முயற்சியை கைவிட்டு உள்ளார். தொடர்ந்து, தெருவில் நின்று தகராறில் ஈடுபட்டதால், பயத்தில் பலரும் வீடுகளுக்குள் சென்றுவிட்டனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற சிங்காநல்லூர் போலீசார், மணிகண்டனை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், கடந்த 1 வாரமாக அவரது தாயாரை அடித்து துன்புறுத்தியதும், அதன் காரணமாகவே தெருவில் உள்ளவர்களுடன் தகராறு செய்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து, போலீசார் அவரை நீலாம்பூர் பகுதியில் உள்ள மனநல மருத்துவமமைனக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே மணிகண்டன் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories