பக்கத்தில் வசிப்பவர்களை தாக்கி கத்தியுடன் ரவுடி ரகளை!

kovai
kovai

கோவையில் ரவுடி ஒருவர் மதுபோதையில் பட்டா கத்தியுடன் பக்கத்து வீட்டில் வசிப்பர்களை தாக்க முயற்சிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சிங்காநல்லூர் அடுத்த மசகாளிபாளையம் முல்லை நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். பிரபல ரவுடி என கூறப்படும் இவர், அந்த பகுதியில் அவ்வப்போது மதுபோதையில் பயங்கர ஆயுதங்களுடன் தகராறு செய்து, அங்கிருக்கும் வாகனங்களை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அவரது அடாவடி செயல்களால் அந்த பகுதி மக்கள் தொல்லைபட்டு வந்த நிலையில், ரவுடி மணிகண்டனை தட்டிக்கேட்க முடிவு செய்துள்ளனர்.

நேற்று காலை மணிகண்டனின் வீட்டுக்கு எதிரே உள்ளவர்கள், அவரது அராஜகத்தை தட்டிக்கேட்டு உள்ளனர்.

அப்போது, கற்களை கொண்டு கேட்டை உடைத்து மணிகண்டன் தாக்க முயற்சித்தார். மேலும், அதனை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவர் போலீசுக்கு தகவல் அளிப்பதாக எச்சரித்த நிலையில், ஆத்திரமடைந்த மணிகண்டன் பட்டாக் கத்தியை கொண்டு, அந்த இளைஞரின் வீட்டிற்கே சென்று தாக்க முற்பட்டார்.

மேலும், அவரது வீட்டின் கேட்டை ஏறி குதிக்க முயன்றபோது, அங்கிருந்த பெண் எச்சரித்ததால் அந்த முயற்சியை கைவிட்டு உள்ளார். தொடர்ந்து, தெருவில் நின்று தகராறில் ஈடுபட்டதால், பயத்தில் பலரும் வீடுகளுக்குள் சென்றுவிட்டனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற சிங்காநல்லூர் போலீசார், மணிகண்டனை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், கடந்த 1 வாரமாக அவரது தாயாரை அடித்து துன்புறுத்தியதும், அதன் காரணமாகவே தெருவில் உள்ளவர்களுடன் தகராறு செய்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து, போலீசார் அவரை நீலாம்பூர் பகுதியில் உள்ள மனநல மருத்துவமமைனக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே மணிகண்டன் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories