ரேஷன் கடை: குவிந்த கூட்டம் அதனால் சிதறி ஓட்டம்!

ration
ration

சேலத்தில் கொரோனா பாதிப்பானது அதிகமாகி வருவதால், அரசு பல கட்ட முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனாலும் பொதுமக்கள் சிலர் அலட்சியமாகச் சுற்றித் திரிவதால் தொடர்ந்து நோயின் தீவிரம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

இதற்காக அரசு அதிகாரிகள் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய வண்ணம் உள்ளனர்.

மேலும், வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் விதிமுறையை மீறி வெளியே வந்த நபர்களுக்குக் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

அதேபோல் சேலம் கிச்சிப்பாளையம் காந்திமகான் தெரு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கப் பொதுமக்கள் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமனித இடைவெளி இல்லாமல் கூடி நிற்பதாகப் புகார்கள் குவிந்தது.

தனிமனித இடைவெளியை உறுதி செய்யச் சொல்லிக் குறிப்பிட்ட ரேஷன் கடை ஊழியர்கள் பலமுறை அறிவுறுத்தியும் எந்த பலனும் இல்லை. இதையடுத்து மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரேஷன் கடைக்கு வந்துள்ள அனைவரும் கட்டாயம் கொரானா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேலும் பரிசோதனை செய்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ரேஷன் கடைக்கு வந்த பொதுமக்களை அழைத்து மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கை காரணமாக ரேஷனுக்கு பொருட்களை வாங்க வந்த மக்கள் பொருட்களை வாங்காமல் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் சிலர் பரிசோதனை செய்துகொண்டு பொருட்களைப் பெற்றுச் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories