உயிர்த்தெழுந்த #ஏசு உயிரோடிருந்தால் வரச் சொல்லுங்கள் மன்னிப்பு கேட்கிறேன்!

ilayaraja - 2026

உயிர்த்தெழுந்த #ஏசு உயிரோடிருந்தால் வரச் சொல்லுங்கள் மன்னிப்பு கேட்கிறேன்..

இதுதான் இளையராஜா சொல்லும் பதிலாக இருக்கும் என்று இளையராஜாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இளையராஜா, அண்மையில் கூகுள் அலுவலகத்தில் பேசியபோது, தாம் யுடீயூப்பில் இயேசு உயிர்த்தெழுதல் குறித்து, அவ்வாறு நடக்கவே இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்வதைப் பார்த்ததாகவும், இயேசு உயிர்த்தெழுந்தாரா இல்லையா என்பது குறித்தெல்லாம் தாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை என்றும், ஆனால், ரமண மகரிஷி அவ்வாறு உயிர்த்தெழுந்ததை சிறு வயதில் உணர்ந்ததை பலரும் சொல்லியிருக்கிறார்கள் என்றும், அவ்வாறு வந்த ஒரு மகானைத் தாம் பின்னரும் உயிருடன் பார்த்ததாகவும் கூறியிருந்தார்.

அவரது இயல்பான பேச்சு ஊடகங்களில் சர்ச்சை ஆக்கப் பட்டது. குறிப்பாக ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியதை கருத்துச் சுதந்திரம் என்றும், அதற்கு எதிராகப் போராடுபவர்களை வெறியர்கள் என்றும் வர்ணித்த ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இப்போது மாறுபட்ட அளவுகோலைக் கொண்டுள்ளனர் என்று திட்டித் தீர்க்கின்றனர் சமூக ஊடகங்களில்!

இந்நிலையில் ஏசு கிறிஸ்து குறித்து சர்ச்சையான வகையில் கருத்து கூறியதாக, இளையராஜா மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா, ஏசு உயிர்த்தெழுதல் குறித்து இளையராஜா கூறிய  கருத்துக்கள், கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை கேலி செய்வதாகவும், அவமானப்படுத்துவதாகவும் உள்ளது என்று சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர், இளையராஜா வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இன்று இளையராஜா மீது கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது…

ஏசு கிறிஸ்து மரித்து உயிர்தெழுந்தார் என்பது உலகமெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் நம்பிக்கை. இன்னும் சில தினங்களில் ஏசு உயிர்தெழுந்த நாள் உலகமெங்கும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நேரத்தில் இளையராஜா, ஏசு உயிர்த்தெழுதலை கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார். அவரின் கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத உணர்வை புண்படுத்தும் விதத்தில் பேசிய இளையராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், இளையராஜா கருத்துக்கு பலர் தங்கள் பக்கங்களில் ஆதரவாக பதிவுகளை செய்து வருகின்றனர்.

அவற்றில் ஒன்று…

we support raja - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories