உயிர்த்தெழுந்த #ஏசு உயிரோடிருந்தால் வரச் சொல்லுங்கள் மன்னிப்பு கேட்கிறேன்!

ilayaraja - 2026

உயிர்த்தெழுந்த #ஏசு உயிரோடிருந்தால் வரச் சொல்லுங்கள் மன்னிப்பு கேட்கிறேன்..

இதுதான் இளையராஜா சொல்லும் பதிலாக இருக்கும் என்று இளையராஜாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இளையராஜா, அண்மையில் கூகுள் அலுவலகத்தில் பேசியபோது, தாம் யுடீயூப்பில் இயேசு உயிர்த்தெழுதல் குறித்து, அவ்வாறு நடக்கவே இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்வதைப் பார்த்ததாகவும், இயேசு உயிர்த்தெழுந்தாரா இல்லையா என்பது குறித்தெல்லாம் தாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை என்றும், ஆனால், ரமண மகரிஷி அவ்வாறு உயிர்த்தெழுந்ததை சிறு வயதில் உணர்ந்ததை பலரும் சொல்லியிருக்கிறார்கள் என்றும், அவ்வாறு வந்த ஒரு மகானைத் தாம் பின்னரும் உயிருடன் பார்த்ததாகவும் கூறியிருந்தார்.

அவரது இயல்பான பேச்சு ஊடகங்களில் சர்ச்சை ஆக்கப் பட்டது. குறிப்பாக ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியதை கருத்துச் சுதந்திரம் என்றும், அதற்கு எதிராகப் போராடுபவர்களை வெறியர்கள் என்றும் வர்ணித்த ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இப்போது மாறுபட்ட அளவுகோலைக் கொண்டுள்ளனர் என்று திட்டித் தீர்க்கின்றனர் சமூக ஊடகங்களில்!

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

இந்நிலையில் ஏசு கிறிஸ்து குறித்து சர்ச்சையான வகையில் கருத்து கூறியதாக, இளையராஜா மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா, ஏசு உயிர்த்தெழுதல் குறித்து இளையராஜா கூறிய  கருத்துக்கள், கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை கேலி செய்வதாகவும், அவமானப்படுத்துவதாகவும் உள்ளது என்று சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர், இளையராஜா வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இன்று இளையராஜா மீது கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது…

ஏசு கிறிஸ்து மரித்து உயிர்தெழுந்தார் என்பது உலகமெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் நம்பிக்கை. இன்னும் சில தினங்களில் ஏசு உயிர்தெழுந்த நாள் உலகமெங்கும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நேரத்தில் இளையராஜா, ஏசு உயிர்த்தெழுதலை கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார். அவரின் கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத உணர்வை புண்படுத்தும் விதத்தில் பேசிய இளையராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், இளையராஜா கருத்துக்கு பலர் தங்கள் பக்கங்களில் ஆதரவாக பதிவுகளை செய்து வருகின்றனர்.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

அவற்றில் ஒன்று…

we support raja - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories