December 6, 2025, 6:03 PM
26.8 C
Chennai

உயிர்த்தெழுந்த #ஏசு உயிரோடிருந்தால் வரச் சொல்லுங்கள் மன்னிப்பு கேட்கிறேன்!

ilayaraja - 2025

உயிர்த்தெழுந்த #ஏசு உயிரோடிருந்தால் வரச் சொல்லுங்கள் மன்னிப்பு கேட்கிறேன்..

இதுதான் இளையராஜா சொல்லும் பதிலாக இருக்கும் என்று இளையராஜாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இளையராஜா, அண்மையில் கூகுள் அலுவலகத்தில் பேசியபோது, தாம் யுடீயூப்பில் இயேசு உயிர்த்தெழுதல் குறித்து, அவ்வாறு நடக்கவே இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்வதைப் பார்த்ததாகவும், இயேசு உயிர்த்தெழுந்தாரா இல்லையா என்பது குறித்தெல்லாம் தாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை என்றும், ஆனால், ரமண மகரிஷி அவ்வாறு உயிர்த்தெழுந்ததை சிறு வயதில் உணர்ந்ததை பலரும் சொல்லியிருக்கிறார்கள் என்றும், அவ்வாறு வந்த ஒரு மகானைத் தாம் பின்னரும் உயிருடன் பார்த்ததாகவும் கூறியிருந்தார்.

அவரது இயல்பான பேச்சு ஊடகங்களில் சர்ச்சை ஆக்கப் பட்டது. குறிப்பாக ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியதை கருத்துச் சுதந்திரம் என்றும், அதற்கு எதிராகப் போராடுபவர்களை வெறியர்கள் என்றும் வர்ணித்த ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இப்போது மாறுபட்ட அளவுகோலைக் கொண்டுள்ளனர் என்று திட்டித் தீர்க்கின்றனர் சமூக ஊடகங்களில்!

இந்நிலையில் ஏசு கிறிஸ்து குறித்து சர்ச்சையான வகையில் கருத்து கூறியதாக, இளையராஜா மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா, ஏசு உயிர்த்தெழுதல் குறித்து இளையராஜா கூறிய  கருத்துக்கள், கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை கேலி செய்வதாகவும், அவமானப்படுத்துவதாகவும் உள்ளது என்று சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர், இளையராஜா வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஆணையர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இன்று இளையராஜா மீது கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது…

ஏசு கிறிஸ்து மரித்து உயிர்தெழுந்தார் என்பது உலகமெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் நம்பிக்கை. இன்னும் சில தினங்களில் ஏசு உயிர்தெழுந்த நாள் உலகமெங்கும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நேரத்தில் இளையராஜா, ஏசு உயிர்த்தெழுதலை கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார். அவரின் கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத உணர்வை புண்படுத்தும் விதத்தில் பேசிய இளையராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், இளையராஜா கருத்துக்கு பலர் தங்கள் பக்கங்களில் ஆதரவாக பதிவுகளை செய்து வருகின்றனர்.

அவற்றில் ஒன்று…

we support raja - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories