February 22, 2026, 3:55 PM
30.4 C
Chennai

செங்கோட்டையில் தாம்பரம்- கொல்லம் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு! 

29573288 1303863963077630 8063460406289394953 n e1522549568282 - 2026

கொல்லத்திலிருந்து செங்கோட்டை வழியாக தாம்பரம் செல்லும் சிறப்பு ரயிலுக்கு செங்கோட்டை வர்த்தக சங்கம் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செங்கோட்டை –புனலூர் மீட்டர்கேஜ் ரயில் பாதையில் கடந்த 2010ஆம் ஆண்டு செப்-20ஆம் தேதி ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் மூன்றாண்டுகளுக்கு பின்னர் பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் விரைந்து முடிக்கப்பட்டன.

கடந்த மார்ச் மாதம் புனலூர் முதல் எடமன் வரையில் 20கி.மீ தூரமும் செங்கோட்டை முதல் நியூஆரியங்காவு இடையே 20.3கி.மீ தூரமும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மீதமுள்ள பகுதியான நியூஆரியங்காவு முதல் எடமன் வரையிலான சுமார் 10.5கி.மீட்டர் தூரத்திற்கான பணிகளும் அக்டோபர் மாதம் நிறைவு செய்யப்பட்டு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சான்றும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் உறுதியாக ரயில் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அறிவித்திருந்தார். (வண்டி எண் 06027) முன்னோட்டமாக இன்று இருமாநிலங்களும் எதிர்பார்த்த செங்கோட்டை—புனலூர் அகல ரயில் பாதையில் தாம்பரம்-கொல்லம் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

நேற்று மாலை 5 மணிக்கு தாம்பரதிலிருந்து புறப்பட்டு இன்று காலை 10.30 மணிக்கு கொல்லம் வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் இன்று மாலை 4.50க்கு செங்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

செங்கோட்டை வர்த்தக சங்க சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர வர்த்தக சங்க தலைவர் ரஹீம் தலைமை தாங்கினார். செயலாளர் சதீஷ், ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் சுந்தரம், நாராயணன், முருகேசன், அக்ரி சேக்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனை தொடர்ந்து வர்த்தக சங்கம் சார்பில் ரயில் ஓட்டுநர்களுக்கும், சிறப்பு ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கும் வர்த்தக சங்க நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கினர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories