செங்கோட்டையில் தாம்பரம்- கொல்லம் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு! 

29573288 1303863963077630 8063460406289394953 n e1522549568282 - 2026

கொல்லத்திலிருந்து செங்கோட்டை வழியாக தாம்பரம் செல்லும் சிறப்பு ரயிலுக்கு செங்கோட்டை வர்த்தக சங்கம் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செங்கோட்டை –புனலூர் மீட்டர்கேஜ் ரயில் பாதையில் கடந்த 2010ஆம் ஆண்டு செப்-20ஆம் தேதி ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் மூன்றாண்டுகளுக்கு பின்னர் பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் விரைந்து முடிக்கப்பட்டன.

கடந்த மார்ச் மாதம் புனலூர் முதல் எடமன் வரையில் 20கி.மீ தூரமும் செங்கோட்டை முதல் நியூஆரியங்காவு இடையே 20.3கி.மீ தூரமும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மீதமுள்ள பகுதியான நியூஆரியங்காவு முதல் எடமன் வரையிலான சுமார் 10.5கி.மீட்டர் தூரத்திற்கான பணிகளும் அக்டோபர் மாதம் நிறைவு செய்யப்பட்டு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சான்றும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் மாதம் உறுதியாக ரயில் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அறிவித்திருந்தார். (வண்டி எண் 06027) முன்னோட்டமாக இன்று இருமாநிலங்களும் எதிர்பார்த்த செங்கோட்டை—புனலூர் அகல ரயில் பாதையில் தாம்பரம்-கொல்லம் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

நேற்று மாலை 5 மணிக்கு தாம்பரதிலிருந்து புறப்பட்டு இன்று காலை 10.30 மணிக்கு கொல்லம் வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் இன்று மாலை 4.50க்கு செங்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

செங்கோட்டை வர்த்தக சங்க சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர வர்த்தக சங்க தலைவர் ரஹீம் தலைமை தாங்கினார். செயலாளர் சதீஷ், ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் சுந்தரம், நாராயணன், முருகேசன், அக்ரி சேக்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனை தொடர்ந்து வர்த்தக சங்கம் சார்பில் ரயில் ஓட்டுநர்களுக்கும், சிறப்பு ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கும் வர்த்தக சங்க நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கினர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories