காசு கொடுப்போம்னு கூட்டியாந்தாங்க…! உண்ணாவிரதப் பந்தலில் புலம்பல்கள்!

IMG 20180403 WA0004 - 2026
வேலூரில் அதிமுக.,வினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, மதியம் உணவு அருந்த வெளியே வந்தவர்கள்…

கோவை: வந்து உக்காருங்க.. உக்காந்தா காசு கொடுப்போம்னு சொன்னாங்க; தந்துடுவாங்களா? – இப்படிப் புலம்பியபடி கேள்விக் கணையுடன் நோக்கியவர்கள், கோவையில் அதிமுக., நடத்திய உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்தவர்கள்.

உண்ணாவிரதப் போராட்டம் என்றாலும், மாநாடு போல தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார்கள் கோவை அதிமுக.,வினர். கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து, தனியார் வாகனங்கள் மூலம் ஆயிரக்கணக்கில் மக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். சிலர் ரூ.300  பணம், மாலை நேரத்தில் நல்ல சாப்பாடு என்று உறுதியளித்து அழைத்து வரப்பட்டனராம்.  மேலும் சிலர், “எவ்வளவு தருவோம்னே சொல்லலீங்க… சாய்ங்காலம் வரைக்கும் ஒக்காந்தா காசு கொடுப்போம்’னு சொன்னாங்க. உண்ணாவிரதம் முடிஞ்சி போறப்பதான் எவ்ளோ கொடுப்பாங்கன்னு தெரியும்..” என்று சொன்னார்களாம்.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆட்களைச் சேர்த்து, கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, அதிமுக.,வினர் மனநலம் குன்றியவர்கள், பார்வையற்றோர், வட இந்தியர்கள், முதியவர்கள் என பல தரப்பட்ட வர்களையும் அழைத்து வந்திருந்தார்களாம். இவர்களில் பலருக்கு தாங்கள் எந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம் என்பதே தெரியாத அளவுக்கு இருந்திருக்கிறார்கள்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

இப்படி கூட்டம் கூட்டமாக பலரையும் உண்ணாவிரதப் பந்தலுக்கு அழைத்து வந்துவிட்டதால், அந்தப் பகுதியில் கூட்டம் அதிகரித்தது. பலருக்கும் அமர்வதற்கு இடம் போதவில்லை. இதனால், சாலையிலும், மேம்பாலத்தின்கீழும் மக்கள் அமர்ந்தனர்.

மதியம் 1 மணிக்குப் பின்னர், உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் ஓரளவு கூட்டம் குறைந்து காணப்பட்டது. அதன் பின்னர், பந்தலில் இருந்த சிலர், டாஸ்மாக் கடைகள், ஹோட்டல்களை நோக்கிச் சென்றனர். ஒரு சிலர் பார்சல் வாங்கி வந்து, உண்ணாவிரதப் பந்தலுக்குப் பின்புறம் அமர்ந்து உணவருந்தினர். இப்படியாக உண்ணாவிரதப் போராட்டம் இன்று களை கட்டியது.

இதனிடையே, அதிமுகவினர் மது அருந்தியதை படம் பிடித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது.  கோவை காந்திபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது மதுக்கடைக்கு சென்று அதிமுகவினர் மது அருந்தியதை படம் பிடித்த செய்தியாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories