காசு கொடுப்போம்னு கூட்டியாந்தாங்க…! உண்ணாவிரதப் பந்தலில் புலம்பல்கள்!

IMG 20180403 WA0004 - 2026
வேலூரில் அதிமுக.,வினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, மதியம் உணவு அருந்த வெளியே வந்தவர்கள்…

கோவை: வந்து உக்காருங்க.. உக்காந்தா காசு கொடுப்போம்னு சொன்னாங்க; தந்துடுவாங்களா? – இப்படிப் புலம்பியபடி கேள்விக் கணையுடன் நோக்கியவர்கள், கோவையில் அதிமுக., நடத்திய உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்தவர்கள்.

உண்ணாவிரதப் போராட்டம் என்றாலும், மாநாடு போல தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார்கள் கோவை அதிமுக.,வினர். கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து, தனியார் வாகனங்கள் மூலம் ஆயிரக்கணக்கில் மக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். சிலர் ரூ.300  பணம், மாலை நேரத்தில் நல்ல சாப்பாடு என்று உறுதியளித்து அழைத்து வரப்பட்டனராம்.  மேலும் சிலர், “எவ்வளவு தருவோம்னே சொல்லலீங்க… சாய்ங்காலம் வரைக்கும் ஒக்காந்தா காசு கொடுப்போம்’னு சொன்னாங்க. உண்ணாவிரதம் முடிஞ்சி போறப்பதான் எவ்ளோ கொடுப்பாங்கன்னு தெரியும்..” என்று சொன்னார்களாம்.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆட்களைச் சேர்த்து, கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, அதிமுக.,வினர் மனநலம் குன்றியவர்கள், பார்வையற்றோர், வட இந்தியர்கள், முதியவர்கள் என பல தரப்பட்ட வர்களையும் அழைத்து வந்திருந்தார்களாம். இவர்களில் பலருக்கு தாங்கள் எந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம் என்பதே தெரியாத அளவுக்கு இருந்திருக்கிறார்கள்.

இப்படி கூட்டம் கூட்டமாக பலரையும் உண்ணாவிரதப் பந்தலுக்கு அழைத்து வந்துவிட்டதால், அந்தப் பகுதியில் கூட்டம் அதிகரித்தது. பலருக்கும் அமர்வதற்கு இடம் போதவில்லை. இதனால், சாலையிலும், மேம்பாலத்தின்கீழும் மக்கள் அமர்ந்தனர்.

மதியம் 1 மணிக்குப் பின்னர், உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் ஓரளவு கூட்டம் குறைந்து காணப்பட்டது. அதன் பின்னர், பந்தலில் இருந்த சிலர், டாஸ்மாக் கடைகள், ஹோட்டல்களை நோக்கிச் சென்றனர். ஒரு சிலர் பார்சல் வாங்கி வந்து, உண்ணாவிரதப் பந்தலுக்குப் பின்புறம் அமர்ந்து உணவருந்தினர். இப்படியாக உண்ணாவிரதப் போராட்டம் இன்று களை கட்டியது.

இதனிடையே, அதிமுகவினர் மது அருந்தியதை படம் பிடித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது.  கோவை காந்திபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது மதுக்கடைக்கு சென்று அதிமுகவினர் மது அருந்தியதை படம் பிடித்த செய்தியாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories