December 6, 2025, 4:32 AM
24.9 C
Chennai

காசு கொடுப்போம்னு கூட்டியாந்தாங்க…! உண்ணாவிரதப் பந்தலில் புலம்பல்கள்!

IMG 20180403 WA0004 - 2025
வேலூரில் அதிமுக.,வினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, மதியம் உணவு அருந்த வெளியே வந்தவர்கள்…

கோவை: வந்து உக்காருங்க.. உக்காந்தா காசு கொடுப்போம்னு சொன்னாங்க; தந்துடுவாங்களா? – இப்படிப் புலம்பியபடி கேள்விக் கணையுடன் நோக்கியவர்கள், கோவையில் அதிமுக., நடத்திய உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்தவர்கள்.

உண்ணாவிரதப் போராட்டம் என்றாலும், மாநாடு போல தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார்கள் கோவை அதிமுக.,வினர். கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து, தனியார் வாகனங்கள் மூலம் ஆயிரக்கணக்கில் மக்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். சிலர் ரூ.300  பணம், மாலை நேரத்தில் நல்ல சாப்பாடு என்று உறுதியளித்து அழைத்து வரப்பட்டனராம்.  மேலும் சிலர், “எவ்வளவு தருவோம்னே சொல்லலீங்க… சாய்ங்காலம் வரைக்கும் ஒக்காந்தா காசு கொடுப்போம்’னு சொன்னாங்க. உண்ணாவிரதம் முடிஞ்சி போறப்பதான் எவ்ளோ கொடுப்பாங்கன்னு தெரியும்..” என்று சொன்னார்களாம்.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆட்களைச் சேர்த்து, கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, அதிமுக.,வினர் மனநலம் குன்றியவர்கள், பார்வையற்றோர், வட இந்தியர்கள், முதியவர்கள் என பல தரப்பட்ட வர்களையும் அழைத்து வந்திருந்தார்களாம். இவர்களில் பலருக்கு தாங்கள் எந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம் என்பதே தெரியாத அளவுக்கு இருந்திருக்கிறார்கள்.

இப்படி கூட்டம் கூட்டமாக பலரையும் உண்ணாவிரதப் பந்தலுக்கு அழைத்து வந்துவிட்டதால், அந்தப் பகுதியில் கூட்டம் அதிகரித்தது. பலருக்கும் அமர்வதற்கு இடம் போதவில்லை. இதனால், சாலையிலும், மேம்பாலத்தின்கீழும் மக்கள் அமர்ந்தனர்.

மதியம் 1 மணிக்குப் பின்னர், உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் ஓரளவு கூட்டம் குறைந்து காணப்பட்டது. அதன் பின்னர், பந்தலில் இருந்த சிலர், டாஸ்மாக் கடைகள், ஹோட்டல்களை நோக்கிச் சென்றனர். ஒரு சிலர் பார்சல் வாங்கி வந்து, உண்ணாவிரதப் பந்தலுக்குப் பின்புறம் அமர்ந்து உணவருந்தினர். இப்படியாக உண்ணாவிரதப் போராட்டம் இன்று களை கட்டியது.

இதனிடையே, அதிமுகவினர் மது அருந்தியதை படம் பிடித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது.  கோவை காந்திபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது மதுக்கடைக்கு சென்று அதிமுகவினர் மது அருந்தியதை படம் பிடித்த செய்தியாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories