கமல் ஒரு அரசியல் அப்ரன்டீஸ்… கலாய்க்கும் ஜெயக்குமார்!

jayakumar - 2026

கமல் ஒரு அரசியல் அப்ரன்டீஸ் என்று அமைச்சர் ஜெயக்குமார் கமலை கலாய்த்துள்ளார்.

அரசியலில் அப்பரண்டீஸாக உள்ள கமல்ஹாசன், இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கமல் மீதான அக்கறையில் அமைச்சர் ஜெயக்குமார் அவருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர் கூறியது…

அதிமுக., நாடாளுமன்றத்தை முழுமையாக முடக்கி மிகுந்த அழுத்தம் கொடுத்து வருகிறது. மத்திய அரசை கண்டித்து அதிமுக., சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. ஜனநாயக ரீதியில்., அதிமுக தனது நிலைப்பாட்டை வலியுறுத்தி அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயல்கிறார். சட்டத்துக்கு புறம்பாக முன்னறிவிப்பு இன்றி சாலை மறியல், கற்களை வீசுவது, அரசு பேருந்துகளை நாசப்படுத்துவது போன்றவைகளை திமுக செய்து வருகிறது.

எப்படியாவது ஆட்சியைக் கலைத்து விட வேண்டும் என்று திமுக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. ஆனால் திமுக முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது.

போராட்டம் என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக முன்னறிவிப்பின்றி சாலை மறியல், பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது போன்ற செயல்களில் திமுக ஈடுபடுகிறது. காவிரி வழக்கு விசாரணை 9-ம் தேதி வருகிறது. நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

ஆனால், அறவழியில் அனுமதிக்கப்பட்ட போராட்டங்களை அதிமுக செய்து வருகிறது. பல இடங்களில் கல்வீச்சு, பேருந்து கண்ணாடி உடைப்பு சம்பவங்களில் திமுக ஈடுபட்டுள்ளது. இந்த செயல்களை எப்படி அனுமதிக்க இயலும் ?. திமுக உள்நோக்கத்துடன் போராடி வருகிறது.

திமுகவை போல 4 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடிக்காமல், 9 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது அதிமுக என்றார் ஜெயக்குமார்.

இதனிடையே,  அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் ஒரு வார்த்தை கூட மத்திய அரசை எதிர்த்து விமர்சிக்காதது ஏன் ? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, திமுக.,வின் துரோகத்தை எடுத்துக் கூறிய ஜெயக்குமார், மழுப்பலாகப் பதிலளித்து நகர்ந்தார்.

மேலும், ”அரசியல் அப்ரண்டிஸ்” கமலஹாசன். அவர் ஒரு ரிட்டையர்டு நடிகர் என்று கமல் குறித்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

இதனிடையே, கமல்ஹாசன் பேசுவது யாருக்குமே புரியாது; வசனம் எழுதிக் கொடுத்தால் பேசக் கூடியவர் கமல்! என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்னொரு விதத்தில் தாக்கியிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Topics

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories