December 5, 2025, 5:50 PM
27.9 C
Chennai

கமல் ஒரு அரசியல் அப்ரன்டீஸ்… கலாய்க்கும் ஜெயக்குமார்!

jayakumar - 2025

கமல் ஒரு அரசியல் அப்ரன்டீஸ் என்று அமைச்சர் ஜெயக்குமார் கமலை கலாய்த்துள்ளார்.

அரசியலில் அப்பரண்டீஸாக உள்ள கமல்ஹாசன், இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கமல் மீதான அக்கறையில் அமைச்சர் ஜெயக்குமார் அவருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர் கூறியது…

அதிமுக., நாடாளுமன்றத்தை முழுமையாக முடக்கி மிகுந்த அழுத்தம் கொடுத்து வருகிறது. மத்திய அரசை கண்டித்து அதிமுக., சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. ஜனநாயக ரீதியில்., அதிமுக தனது நிலைப்பாட்டை வலியுறுத்தி அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயல்கிறார். சட்டத்துக்கு புறம்பாக முன்னறிவிப்பு இன்றி சாலை மறியல், கற்களை வீசுவது, அரசு பேருந்துகளை நாசப்படுத்துவது போன்றவைகளை திமுக செய்து வருகிறது.

எப்படியாவது ஆட்சியைக் கலைத்து விட வேண்டும் என்று திமுக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. ஆனால் திமுக முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது.

போராட்டம் என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக முன்னறிவிப்பின்றி சாலை மறியல், பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது போன்ற செயல்களில் திமுக ஈடுபடுகிறது. காவிரி வழக்கு விசாரணை 9-ம் தேதி வருகிறது. நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

ஆனால், அறவழியில் அனுமதிக்கப்பட்ட போராட்டங்களை அதிமுக செய்து வருகிறது. பல இடங்களில் கல்வீச்சு, பேருந்து கண்ணாடி உடைப்பு சம்பவங்களில் திமுக ஈடுபட்டுள்ளது. இந்த செயல்களை எப்படி அனுமதிக்க இயலும் ?. திமுக உள்நோக்கத்துடன் போராடி வருகிறது.

திமுகவை போல 4 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடிக்காமல், 9 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது அதிமுக என்றார் ஜெயக்குமார்.

இதனிடையே,  அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் ஒரு வார்த்தை கூட மத்திய அரசை எதிர்த்து விமர்சிக்காதது ஏன் ? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, திமுக.,வின் துரோகத்தை எடுத்துக் கூறிய ஜெயக்குமார், மழுப்பலாகப் பதிலளித்து நகர்ந்தார்.

மேலும், ”அரசியல் அப்ரண்டிஸ்” கமலஹாசன். அவர் ஒரு ரிட்டையர்டு நடிகர் என்று கமல் குறித்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

இதனிடையே, கமல்ஹாசன் பேசுவது யாருக்குமே புரியாது; வசனம் எழுதிக் கொடுத்தால் பேசக் கூடியவர் கமல்! என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்னொரு விதத்தில் தாக்கியிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories