தலித் மக்கள் மீதான இஸ்லாமியரின் வெறித் தாக்குதல்: இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

bomminayakkanpatti hindumunnani arpattam - 2026

தேனி மாவட்டத்தில் ஹிந்து பட்டியலினத்தவர் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மே 12 சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு, இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்து முன்னணி அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் தேனி மாவட்டம் பொம்மி நாயக்கன்பட்டியில் இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து லட்சகனக்கான இந்து முன்னணி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். சென்னை ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கலந்து கொண்டார்.

hindumunnari arpattam - 2026

இந்த ஆர்ப்பாட்டங்களின் போது,

  • பொம்மிநாயக்கன்பட்டி இந்துக்களை தாக்கிய பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்
  • மெளனம் காக்கும் தேனி மாவட்டநிர்வாகம் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு நிவாரணம் அளித்திட வேண்டும்
  • பயங்கிரவாதிகளால் தாக்குதலுக்கு ஆளான அப்பாவி இந்துக்கள் மீது காவல்துறையினரால் போடபட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்
  • “பொம்மிநாயக்கன்பட்டி” என்ற பெயரை “துலுக்கன்பட்டி” என்று பெயர் மாற்ற முயற்ச்சிப்பதர்க்கு மாவட்ட நிர்வாகம் துணைபோகக் கூடாது
  • தலித்களைக் காக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (PCR)… சட்டப்படி கொலை வெறியோடு தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.

சென்னை, காஞ்சி கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள்…  முஸ்லீம்களின் அடாவடித்தனம் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அம்பேத்கர் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்து அதனை அப்புறப்படுத்தியவர்கள் முஸ்லீம்கள்.

மேல் விஷாராம் முஸ்லீம்கள் பெரும்பான்மையால், இந்துக்கள் அதிகம் வாழும் கீழ் விஷாராம் புறக்கணிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் சென்று தனி ஊராக மாற்றப்பட்டது. பேராணம்பட்டு, மீன்சுருட்டி தனித் தொகுதிகளாக மாற்றப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் முஸ்லீம்கள்.

இப்படி பல உதாரணங்களை கூறலாம். அதுபோல பொம்மிநாயக்கன்பட்டியில் நடைபெற்ற சம்பவம். இதனை இந்து முன்னணி மாநிலத் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு, உலகிற்கு வெளிப்படுத்தினார்.

இனி தலீத் சொல்லிக்கொண்டு ஒருவனும் அரசியல் செய்ய முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. போலி மதச்சார்பின்மைவாதிகளை பட்டியலினத்து மக்கள் புறக்கணிப்பார்கள். இதன் முன்னோட்டம் தான். பொம்மிநாயக்கன் பட்டி கிராமத்து வீர பெண்மணிகள் திருமாவளவனை புறக்கணித்த நிகழ்வு.

இன்று ஒட்டுமொத்த தமிழகத்திலும் இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பட்டியலினத்து மக்களை பாதுகாக்க ஒட்டு மொத்த இந்து சமுதாயமும் வீதியில் வந்து போராடியிருக்கிறது.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

நல்ல நம்பிக்கையை, ஒற்றுமை உணர்வை, விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்லதொரு துவக்கம். இனி தமிழகம் மாற்றத்தை நோக்கி வெற்றி நடைபோடும். இந்துக்களை புறந்தள்ளும் அரசியல்வாதிகள் செல்லாக் காசாவார்கள்.. என்று பேசினர்.

கோவையின் சில பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் சனிக்கிழமை நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாநகர் மாவட்டத் தலைவர் தசரதன் தலைமை வகித்தார்.

தேனி மாவட்டம், பொம்மிநாயக்கன்பட்டி தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப் பட்டன.

இந்த ஆர்ப்பட்டாத்தில், மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் சி.தனபால், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த.குணா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சூலூரில், சூலூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் இந்து முன்னணி மேற்கு மாவட்டத் தலைவர் ஆர்.எம். சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வெள்ளீங்கிரி வரவேற்று பேசினார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

மேற்கு மாவட்டச் செயலர்கள் ராஜ்குமார், சர்வேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பேசினர். இதில் 80- க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கலந்துகொண்டனர். நகரச் செயலர் மதன்குமார் நன்றி கூறினார்.

அதுபோல்  மேட்டுப்பாளையம் நகர பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலர் ராஜ்குமார் தலைமை வகித்துப் பேசினார். மாவட்ட துணைத் தலைவர் தங்கவேல், மாவட்டச் செயலர் சதீஷ்குமார் உள்பட திரளான அமைப்பினர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories