ஸ்ரீரங்கம் கருவறை அருகே காலணி எறிந்த ‘சைக்கோ’: என்ன சொல்கிறார் இணை ஆணையர்? உண்மை வெளிவருமா?

srirangam temple - 2026

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள், செருப்பு மற்றும் கத்தியுடன் உள்ளே நுழைந்த சமூக விரோத கும்பலில் ஒருவன் கருவறை அருகே சென்று, அங்கே இருந்த கோயில் அர்ச்சகரை கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், காலணியை எடுத்து கருவறைக்குள் எறிந்துள்ளான். சம்பந்தப்பட்ட நபரை காவலர்கள் பிடித்ததும் அவனுடன் வந்த மற்ற சமூக விரோத கும்பல் தப்பி ஓடியுள்ளது.

கத்தியைக் காட்டி மிரட்டியவனைப் பிடித்து, காவலர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த நபர் குறித்து விசாரித்தபோது, அவன் பெயர் தர்மராஜ் என்றும், கொத்தனாராக வேலை செய்து வருவதாகவும், திருவிடைமருதூர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தனக்கு காதல் தோல்வி மற்றும் திருமணம் கைகூடாத விரக்தியில் இவ்வாறு செய்து விட்டதாகவும் கூறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வின் பின்னர், ஸ்ரீரங்கம் கோயில் செயல் அலுவலரும் இணை ஆணையருமான பொ.ஜெயராமன் இன்று நடைபெற்ற சம்பவம் குறித்துக் குறிப்பிட்டு, பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரி ஒரு ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில் அவர் இந்தச் சம்பவம் குறித்து குறிப்பிட்டதில், தரிசனத்துக்கு வந்த நபர் ஒருவர், பெருமாள் சந்நிதி முன் அழுக்குப் பை ஒன்றைப் போட்டதாகவும், அதை காவலர்கள் எடுத்து வந்து புகார் அளித்ததாகவும் கூறியுள்ளார்.

srirangam statement - 2026

அந்தக் கடிதத்தில் இவர் குறிப்பிட்டுள்ளது…

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள் மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இன்று 24.05.2018 காலை சுமார் 10.30 மணி அளவில் பக்தர்கள் கியூ வரிசையில் வந்து தரிசனம் செய்து கொண்டிருந்த போது, கியூ வரிசையில் தோளில் பையுடன் வந்த வாலிபர் ஒருவர் மூலவர் பெரிய பெருமாள் சந்நிதி முன்புறம் உள்ள குலசேகரன் படியில் தனது தோளில் இருந்த பையினைப் போட்டு விட்டார். உடனடியாக அங்கிருந்த திருக்கோயில் பணியாளர்கள் அந்த நபரை திருக்கோயிலுக்கு வெளியே அழைத்து வந்து, அவர் வைத்திருந்த பையினை சோதித்தபோது, அவரது பையில் அழுக்கு துணிகள், சிறிய கத்தி, ஒரு சிறிய கத்திரிக்கோல் ஆகியவை இருந்ததால் மேற்படி நபர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும். திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் கைப்பைகளை சோதனை செய்து உள்ளே அனுமதிக்கும் வகையில் மூன்று நுழைவு வாயில்களிலும் தீவிர கண்காணிப்பு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர கேட்டுக் கொள்ளப் படுகிறது. – என்று கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

காலையில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், இளைஞர் ஒருவர் பையுடன் சென்று செருப்பை கருவறை நோக்கி வீசி எறிந்ததாகக் கூறியுள்ளனர். மேலும், கையில் வைத்திருந்த கத்தியால் கோயில் அர்ச்சகரை மிரட்டியதாகவும் கூறியுள்ளனர். அந்த நபர், மனநலம் குன்றிய சைகோ என்று போலீஸார் கூறியுள்ளனர். இந்த நிலையில், அழுக்குப் பையுடன் வந்த அந்த நபர் அழுக்குப் பையைப் போட்டு விட்டுச் சென்றுவிட்டதாக கோயில் இணை ஆணையர் கூறியுள்ளார்.

இந்த அறிக்கையின் படி பார்த்தால், சில ஐயங்கள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

அழுக்குப் பையைப் போட்டுச் சென்றதற்காக ஒருவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க இயலுமா? அந்த நபர் இந்த அழுக்குப் பையைச் சுமந்து கொண்டு உள்ளே வரும் வரையில் பாதுகாவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

திருவரங்கம் கோயிலில் தெற்கு நுழைவாயிலான பிரதான வாசல், வடக்கு நுழை வாயில், கிழக்கு நுழைவாயில் மூன்றிலும், மெட்டல் டிடெக்டர் என்று ஒன்று இருக்கும். மூன்றிலுமே பாதுகாவலர்கள், காவல்துறை நபர், சோதனை செய்வதற்கான பயிற்சி பெற்ற ஒருவர் என அமர்ந்திருப்பது வழக்கம். சாதாரணமாக பக்தர்கள் சென்றாலே சோதித்துவிட்டு அனுப்புபவர்கள், அழுக்குப் பையுடன் சைகோ போன்று இருப்பவரை எப்படி கருவறை வரை உள்ளே செல்ல அனுமதித்தார்கள்?

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

துவக்கத்திலேயே சோதனை செய்து, சந்தேகம் வந்து பேசும் போது சைகோவா இல்லையா என்பது தெரிந்திருக்குமே. அதைக்கூடவா செய்யாமல் பாதுகாவலர்கள் இருந்தார்கள்?

இப்போது, தீவிர கண்காணிப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரக் கோரும் கோயில் இணை ஆணையர், இத்தனை நாட்கள் இந்த மெட்டல் டிடெக்டர்கள், காவலர்களை எல்லாம் வைத்து, கோயிலைப் பாதுகாப்புடன் வைத்திருப்பதாக பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தாரா என்ற கேள்விகள் நம் மனத்தில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

இந்தச் சம்பவத்தில் ஏதோ ஒரு பின்னணியை மறைக்கவே முயலுகிறார்கள் என்பது மட்டும் இணை ஆணையரின் அறிக்கையில் இருந்து வெளிப்படுவதை நம்மால் மறைக்கவும் இயலவில்லை.

3 COMMENTS

  1. அங்கு பணியாற்றும் அனைவருமே கூலி க்கு மாரடிப்பவர்கள். அந்த சம்பவம் நடந்த பின்னரும் சேவார்த்திகளை தரிசனத்திற்கு அனுமதித்து உள்ளார்கள். பின்னர் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக பரிகாரத்தை நடத்தி உள்ளனர். அங்கு உள்ள அனைத்து ஊழியர்களும் மாற்றப்பட வேண்டும். அரங்கனின் கோபத்திற்க்கு இவர்கள் வெகு விரைவில் ஆட்பட போகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories