நான் ஒரு சமூக விரோதி: கமல்ஹாசனின் ஒப்புதல் வாக்குமூலம்!

16 May 21 Kamal - 2026

நானும் ஒரு சமூக விரோதிதான் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதி என்றால், தானும் சமூக விரோதிதான் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்திப்பதற்காக பெங்களூரு புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்திற்கான தேவை குறித்து, குமாரசாமியிடம் பேச இருப்பதாகவும், காலா பட பிரச்னையை வியாபாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக ரஜினி தெரிவித்தது அவரது சொந்த கருத்து என்று குறிப்பிட்ட கமல், போராட்டத்தை நிறுத்தக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள், 99 நாட்கள் அமைதியாகப் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, போராட்டத்துக்கான உதவிகளைச் செய்துவந்தது மாவட்ட காவல் துறை. நூறாவது நாளிலும் அமைதிப் போராட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப் படும் என்று கூறியிருந்தனர் மக்கள்.

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

எனவே அதற்கு ஏற்ப, வழக்கமான அமைதி வழிப் போராட்டம் என நினைத்து, குறைவான காவலர்களையே பாதுகாப்புக்கு நிறுத்தி, காவல் துறை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், ரகசியமாக வன்முறை போராட்டக் குழுக்களில் இருந்து ஊடுருவிய சிலர், முகத்தில் அடையாளம் தெரியாத அளவுக்கு துணியால் கட்டிக் கொண்டு, கம்பு கட்டை ஆயுதங்களுடன் ஊர்வலத்தின் துவக்கத்தில் இருந்தே கலந்து கொண்டு, வன்முறையை அரங்கேற்றினார்கள். போலீஸாரை ஓட ஓட விரட்டி கடுமையாகத் தாக்கி, கற்களை எறிந்து காட்டுமிராண்டித் தனத்தில் ஈடுபட்டார்கள்.

இதை அடுத்தே துப்பாக்கிச் சூடு அளவுக்கு அன்றைய தினம் சென்றது. 144 தடை உத்தரவு இருக்கும் போது, இப்படி எல்லாம் வன்முறையில் ஈடுபட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தப் படும் என்பது அந்த ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும், ஊர்வலத்தில் வன்முறையை நடத்தச் சொல்லி தூண்டிவிட்டவர்களுக்கும் தெரியாமலா இருக்கும்.

இதனால்தான் ரஜினி காந்த் தனது கருத்தை தெளிவாகச் சொன்னார். போராட்டம் வேண்டாம், எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும். போலீஸார் மீது வன்முறையில் ஈடுபட்டதால் தான் துப்பாக்கிச் சூடு வரை சென்றது என்று தமிழகத்தின் நலன் கருதி தொலைநோக்கோடு ரஜினி சொன்ன கருத்தை கடுமையாக எதிர்த்தார்கள் அரசியல்வாதிகள் சிலர். குறிப்பாக சீமான் உள்ளிட்டவர்கள். எவரெல்லாம் ரஜினியின் கருத்தை எதிர்த்தார்களோ அவர்கள் எல்லோருமே சமூக விரோதிகள்தான் என்று ஒரு தரப்பு ஆணித்தரமாக தங்கள் கருத்துகளைக் கூறியது.

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

இந்நிலையில், கமல்ஹாசன் தாமும் ஒரு சமூக விரோதிதான் என்பதை, ரஜினியின் கருத்தை மறுதலித்து, போராட்டம் வேண்டும் என்று சமூகத்தை பதற்றத்தில் தள்ளி உறுதிப் படுத்தியிருக்கிறார்.

மேலும், ரஜினியின் கருத்து தனிப்பட்ட கருத்து என்று கூறியிருக்கிறார் கமல்ஹாசன். ரஜினி இதுவரை கட்சி தொடங்கவில்லை. அவர் எந்த அமைப்பிலும் இல்லை. அமைப்பு ரீதியாக இயங்கவும் இல்லை. ரஜினி இதுவரையிலும் ஒரு தனிநபர்தான். அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் தனிப்பட்ட வகையில் அவர் சொல்வது தான்! அப்படி இருக்கும் போது, ரஜினியின் கருத்தை தனிப்பட்ட கருத்து என்று, அடிப்படை அறிவுகூட இல்லாத நிலையில் கமல்ஹாசன் சொல்வது, அரைவேக்காட்டுத்தனமே அன்றி வேறல்ல என்று விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.

4 COMMENTS

  1. Iகமல் அவர்களின் கருத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் அவசரகதியில் பதிவிட்டுள்ளார்.
    போராடிய மக்கள் அணைவருமே சமூகவிரோதிகள் எனில் நானும் அப்படி யே என்று சொல்லி யிருக்கிறார். ரஜினி கூட மக்கள் கூட்டத்தில் சில சமூகவிரோதிகள் கலந்துவிட்டார்கள் என்றுதான் சொன்னார். போராடியவர்களை அல்ல. தெளிவாக ப்படிக்கவேண்டும்.

  2. வணக்கம்
    எனக்கு திரு ரஜினியின் அரசியல்ப்ரவேசம் பிடிக்கவில்லை. நான் அவருடைய ரசிகையுமல்லள், ஆன்மீகம் பற்றித் தெளிவில்லாதவர், ஆனால் அவர் தூத்துக்குடியில் போராடியவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று சொல்ல வில்லையே, சில தீவிரவாதிகள் புகுந்து விட்டனர் என்று தானே குறிப்பிட்டுள்ளார், வழக்கம் போல கமல ஹாசன் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்,

  3. It is common knowledge that the peaceful movement was infiltrated by anti-social and anti-national elements aided and abetted by vested interests.Most of these anti-development movements are obviously funded by evangelists with logistics thrown in by Commies.People like Kamalhasan and Prakashraj are also part of this cabal. Govt should keep an eye on these elements and take timely action in the interest of the nation.

  4. தான் ஒரு சமூக விரோதி என்று வாக்குமூலம் அளித்துவிட்டதால் கமலை உடனடியாக கைது செய்து இனி வாயே திறக்க முடியாமல் நன்கு ‘கவனிக்க’ வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories