விபத்தில் படுகாயமடைந்த கேரள இளைஞருக்கு சிகிச்சை! உடனடியாய் செயல்பட்ட வைகோ!

Published:

vaiko helped car accident youth - 2026

கார் விபத்தில் படுகாயம் அடைந்த கேரள இளைஞருக்கு சிகிச்சைக்கு வைகோ உடனடி ஏற்பாடு செய்தார்.

வியாழக்கிழமை இன்று (7.6.2018) பிற்பகல் 2 மணி அளவில் கோவை மதுக்கரை அருகில் பாலக்காடு நெடுஞ்சாலையில், கேரளத்தில் இருந்து வந்த ஒரு கார் லாரியில் மோதி, சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது.

காரை ஓட்டி வந்த இளைஞரை அப்பகுதி வாழ் இளைஞர்கள், காரில் இருந்து வெளியே எடுத்து 108 ஆம்புலன்சுக்குத் தொடர்பு கொண்டு வரவழைத்தனர். அதே நேரத்தில் அந்த வழியாக வந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மற்றும் கோவை மதிமுக., நிர்வாகிகள், அந்த இளைஞரை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்ப உதவினர்.

பின்னர், கோவை அரசு மருத்துவமனை இயக்குநரிடம் வைகோ செல்போன் மூலம் தொடர்பு  கொண்டு பேசி, விபத்து குறித்த தகவலைச் சொல்லி, அந்த இளைஞருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். அதைக் கேட்ட இயக்குனரும், உடனடியாக ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதை  அடுத்து,  அந்த இளைஞருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img