புதுக்கோட்டை: இந்தியாவில் பல்வேறு காரணங்களால் வாகனங்கள் அதிகரித்து வருவதோடு சாலை விபத்துகளும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது நம் நாட்டில் ஓரு ஆண்டுக்கு 1.38லட்சம் பேர் பலியாகின்றனர் மேலை நாடுகளான அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகளின் உள்ள சட்டங்களின் அடிப்படையில் இந்தியாவின் மோட்டார் வாகனச்சட்டத்திலும் திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொன்றுள்ளது இந்த புதிய சட்டதிருத்தின்படி 12வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மீது வாகனம் மோதி உயிரிழப்பு ஏற்பட்டால் 7ஆண்டுகள் சிறை ரூ.4லட்சமும் 12வயதிற்கு மேல் உள்ளவர்கள் மீது மோதி உயிரிழப்பு ஏற்பட்டால் 3ஆண்டுகள் சிறை ரூ.4லட்சம் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது மேலும் கூடுதல் சுமைக்கு ரூ.50ஆயிரமும் சிக்கனலில் நிற்காமல் சென்றால் ரூ.15ஆயிரம் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட உள்ளன கடுமையான சட்டங்கள் அமலில் உள்ள வளர்ந்த நாடுகளில் சரக்கு வாகன போக்குவரத்துக்கு எனத்தனியாக சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன ஆனால் நம் நாட்டில் சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் பொதுவான சாலைகளே உள்ளன இந்த சூழ்நிலையில் மேலை நாடுகளின் அடிப்படையில் கடுமையானச்சட்டங்களை அமல்படுத்துவது நம் நாட்டிற்கு பொருந்துவதாக இருக்காது கடும் விதிமுறைகள் கொண்ட இந்த சட்டத்திற்கு தமிழக அரசம் எதிரிப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது இதற்கு சிஜடியு தொழிற்சங்கம் சார்பில் நாளை பேருந்து லாரி ஆட்டோ ஸ்டிரைக் அனைத்தும் ஓடாது என்று அறிவித்தோடு அதிமுகவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது செய்தி. பொ.ஜெயச்சந்திரன் புதுக்கோட்டை
முதலில் சாலையை சரி பண்ணுங்க; அப்புறம் சட்டத்தை நிறைவேற்றுங்க
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari