மூத்த பத்திரிகையாளர் ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி காலமானார்

rs narayanaswami - 2026

சென்னை: மூத்த பத்திரிகையாளர் ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி சென்னையில் இன்று காலமானார்.  அவருக்கு வயது 85.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகாவில் ரங்கநாதபுரம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேச ஐயருக்குப் பிறந்த 11 குழந்தைகளில் ஒருவர் ஆர்.எஸ். நாராயண ஸ்வாமி. இவரது தாய் மாமா விஷ்ணம்பேட்டையை (திருக்காட்டுப் பள்ளிக்கும் திருவையாறுக்கும் இடையில் காவிரி கரையில் உள்ள ஊர்) பூர்வீகமாகக் கொண்ட வைத்யநாத ஐயர். இவரை மதுரை வைத்யநாத ஐயர் என்றால் தான் அனைவருக்கும் தெரியும். ஆம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பட்டியல் இனத்தோர் வழிபட ஆலயப் பிரவேசத்தை முன்னின்று நடத்திய அதே வைத்யநாத ஐயர்தான்.

படிப்பை முடித்துவிட்டு, இந்தியன் எக்ஸ்பிரஸில் (Indian Express) மதுரையில் பணிக்கு சேர்ந்தார். தன் நேர்மையான பத்திரிகை பணியால் அதன் செய்தி ஆசிரியராக  உயர்ந்தார். அந்தக் கால கட்டத்தில் தான் அவருக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன்  தொடர்பு ஏற்பட்டது. சங்கத்தின் மூத்த கார்யகர்த்தர் மதுரை அண்ணாஜியுடன் மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். பின்னர் பாஜகவில் சிறிது காலம் இருந்தார்.1991ல் தென் சென்னை வேட்பாளராக நாடாளுமன்றத்திற்குப் போட்டி இட்டார்.

பின்னர் விஸ்வ ஹிந்து பரிஷத்தில் இணைந்து தான் இவ்வுலகை விட்டு மறையும் இன்றைய நாள் வரை விஎச்பி.,க்காக களப் பணி செய்தார். கடந்த வாரம் அவர் எழுதிய பாரத தரிசனம் எனும் புத்தகம் மயிலாப்பூர் பிஎஸ் உயர்நிலைப் பள்ளி அரங்கில் நூல் வெளியீடு கண்டது.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை (03.08.2018) காலை 9 மணி அளவில் ஆழ்வார்பேட்டை, சீதம்மாள் காலனியிலுள்ள வீட்டில் இருந்து தொடங்குகிறது.

rsnarayasami - 2026

ஆர்.எஸ். நாராயணஸ்வாமியுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் பாஜக., மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன். அவர் தனது இரங்கல் குறிபில்,  திரு ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி அவர்கள் மதுரையில் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையில் பணி புரிந்த காலத்தில் எனக்கு அறிமுகமானார். பரமபூஜனீய குருஜி கோல்வல்கர் அவர்கள் 1973 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரை வந்திருந்த போது நாராயணஸ்வாமி அவர்களது இல்லத்தில் தான் தங்கி இருந்தார்.

மீனாட்சிபுரத்தில் ஒட்டு மொத்த மதமாற்றம் நடைபெற்ற செய்தியை உலகறியச் செய்ததில் அவருக்கும் பங்குண்டு. சிறுபான்மை அல்லாதோரின் கல்விக் கூடங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை முதன் முதலாக அவர் எடுத்துச் சொல்லியதன் விளைவாகத் தமிழகத்தில் தொடங்கியது தான் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு.

நாராயணஸ்வாமி அவர்கள் அப்பழுக்கற்ற தேச பக்தர். ஹிந்து சிந்தனாவாதி. எந்தக் கருத்தைச் சொல்லும் போதும் உணர்ச்சி வயப்படக் கூடியவர். அவர் எழுதிய “பாரத தேச சரித்திரம்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (29-07-2018) பேசிய போது கூட அவரது அரை மணி நேர உரை உணர்ச்சி மயமாக இருந்தது. அன்னாரது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறேன்.- என்று குறிப்பிட்டுள்ளார்.

3 COMMENTS

  1. அண்ணாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  2. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories