December 5, 2025, 6:56 PM
26.7 C
Chennai

மூத்த பத்திரிகையாளர் ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி காலமானார்

rs narayanaswami - 2025

சென்னை: மூத்த பத்திரிகையாளர் ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி சென்னையில் இன்று காலமானார்.  அவருக்கு வயது 85.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகாவில் ரங்கநாதபுரம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேச ஐயருக்குப் பிறந்த 11 குழந்தைகளில் ஒருவர் ஆர்.எஸ். நாராயண ஸ்வாமி. இவரது தாய் மாமா விஷ்ணம்பேட்டையை (திருக்காட்டுப் பள்ளிக்கும் திருவையாறுக்கும் இடையில் காவிரி கரையில் உள்ள ஊர்) பூர்வீகமாகக் கொண்ட வைத்யநாத ஐயர். இவரை மதுரை வைத்யநாத ஐயர் என்றால் தான் அனைவருக்கும் தெரியும். ஆம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பட்டியல் இனத்தோர் வழிபட ஆலயப் பிரவேசத்தை முன்னின்று நடத்திய அதே வைத்யநாத ஐயர்தான்.

படிப்பை முடித்துவிட்டு, இந்தியன் எக்ஸ்பிரஸில் (Indian Express) மதுரையில் பணிக்கு சேர்ந்தார். தன் நேர்மையான பத்திரிகை பணியால் அதன் செய்தி ஆசிரியராக  உயர்ந்தார். அந்தக் கால கட்டத்தில் தான் அவருக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன்  தொடர்பு ஏற்பட்டது. சங்கத்தின் மூத்த கார்யகர்த்தர் மதுரை அண்ணாஜியுடன் மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். பின்னர் பாஜகவில் சிறிது காலம் இருந்தார்.1991ல் தென் சென்னை வேட்பாளராக நாடாளுமன்றத்திற்குப் போட்டி இட்டார்.

பின்னர் விஸ்வ ஹிந்து பரிஷத்தில் இணைந்து தான் இவ்வுலகை விட்டு மறையும் இன்றைய நாள் வரை விஎச்பி.,க்காக களப் பணி செய்தார். கடந்த வாரம் அவர் எழுதிய பாரத தரிசனம் எனும் புத்தகம் மயிலாப்பூர் பிஎஸ் உயர்நிலைப் பள்ளி அரங்கில் நூல் வெளியீடு கண்டது.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை (03.08.2018) காலை 9 மணி அளவில் ஆழ்வார்பேட்டை, சீதம்மாள் காலனியிலுள்ள வீட்டில் இருந்து தொடங்குகிறது.

rsnarayasami - 2025

ஆர்.எஸ். நாராயணஸ்வாமியுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் பாஜக., மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன். அவர் தனது இரங்கல் குறிபில்,  திரு ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி அவர்கள் மதுரையில் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையில் பணி புரிந்த காலத்தில் எனக்கு அறிமுகமானார். பரமபூஜனீய குருஜி கோல்வல்கர் அவர்கள் 1973 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரை வந்திருந்த போது நாராயணஸ்வாமி அவர்களது இல்லத்தில் தான் தங்கி இருந்தார்.

மீனாட்சிபுரத்தில் ஒட்டு மொத்த மதமாற்றம் நடைபெற்ற செய்தியை உலகறியச் செய்ததில் அவருக்கும் பங்குண்டு. சிறுபான்மை அல்லாதோரின் கல்விக் கூடங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை முதன் முதலாக அவர் எடுத்துச் சொல்லியதன் விளைவாகத் தமிழகத்தில் தொடங்கியது தான் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு.

நாராயணஸ்வாமி அவர்கள் அப்பழுக்கற்ற தேச பக்தர். ஹிந்து சிந்தனாவாதி. எந்தக் கருத்தைச் சொல்லும் போதும் உணர்ச்சி வயப்படக் கூடியவர். அவர் எழுதிய “பாரத தேச சரித்திரம்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (29-07-2018) பேசிய போது கூட அவரது அரை மணி நேர உரை உணர்ச்சி மயமாக இருந்தது. அன்னாரது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறேன்.- என்று குறிப்பிட்டுள்ளார்.

3 COMMENTS

  1. அண்ணாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  2. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories