விநாயகர் சிலை விவகாரம்: நம்பிக்கை தரும் அரசின் உறுதிமொழி!

vinayaka chaturti - 2026

சென்னை: விநாயகர் சிலை வைப்பதற்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சிலை வைப்பதற்கான 24 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, கடந்த 9ஆம் தேதி வெளியிட்ட தமிழக அரசாணையை எதிர்த்து இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப் பட்டிருந்தது.

விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், கரைப்பதற்கும் 24 நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப் பட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது விநாயகர் சிலைகளை வைக்க, ஊர்வலம் செல்ல நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று விநாயகர் சிலை வைக்கவுள்ளோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் சென்னையில் துணை ஆணையர், மாவட்டங்களில் டிஎஸ்பியிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த விண்ணப்பங்களை ஒற்றைச் சாளர முறையில், உடனுக்குடன் பரிசீலித்து, விநாயகர் சிலை வைப்பதில் எந்த வித பிரச்னையும் நேராமல் பார்த்துக் கொள்வதாக அரசுத் தரப்பில் கூறப் பட்டிருந்தது! இதை அடுத்து, அரசின் நடவடிக்கை தங்களுக்கு ஓரளவு நம்பிக்கை அளிப்பதாக, இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.

கடந்த முறை பிரச்னை ஏற்பட்ட இடங்களில் இந்த முறையும் மீண்டும் நிலை நிறுவ இருந்தால், அது குறித்து தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப் படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இந்த முறை அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்வதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories