செங்கோட்டை- மதுரை பாசஞ்சர் 10 நாட்களுக்கு விருதுநகர் வரையே செல்லும்!

Published:

railwaystation - 2026
SONY DSC

மதுரை – விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை பணி காரணமாக மதுரை மற்றும் செங்கோட்டை பயணிகள் ரயில் மதுரை – விருதுநகர் இடையே ரத்து செய்யப் பட்டுள்ளது.

மதுரை – விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக மதுரை மற்றும் செங்கோட்டை பயணிகள் ரயில் மதுரை – விருதுநகர் இடையே (22.10.2018 TO 31.10.2018) 10 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, வண்டி எண். 56734, மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில், விருதுநகர் வரை இயக்கப்படும்.

செங்கோட்டை – 11.50 AM, தென்காசி – 12.05 PM, கடையநல்லூர் – 12.25 PM, விருதுநகர் – 02.30 PM

வண்டி எண். 56735, செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில், விருதுநகரில் இருந்து இயக்கப்படும்.

விருதுநகர் – 06.05 PM, கடையநல்லூர் – 08.15 PM, தென்காசி – 08.50 PM, செங்கோட்டை – 09.15 PM

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

குறிப்பு: வண்டி எண். 56735, செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில், செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் சிலம்பு எக்ஸ்பிரஸ் விருதுநகர் வந்த பின்பு புறப்படும்.

Related articles

Recent articles

spot_img