நடத்தையில் சந்தேகம்! 2வது மனைவியை கொன்ற கணவனுக்கு வலைவீச்சு!

murder - 2026

நெல்லை மாவட்டம் ஊத்துமலை போலீஸ் சரகத்திற்கு உட்டபட்ட கம்மாவூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சுந்தரி. இவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சலவைத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு வளவி என்ற 5வயது குழந்தை உள்ளது.

ஆறுமுகத்திற்கு நெல்லை தச்சநல்லூரை அடுத்துள்ள ராஜவள்ளிபுரம் பகுதியை சார்ந்த சுந்தரியை 2வதாக திருமணம் செய்து வைத்துள்ளனர். சென்னையில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்தப் பகுதிக்கு குடி வந்துள்ளனர்.

இந்நிலையில் மனைவி சுந்தரியின் நடத்தை மீது கணவன் ஆறுமுகத்திற்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மனைவியை ஆறுமுகம் தாக்கியுள்ளார். இதில் சுந்தரி இறந்து விடவே யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்த கழிப்பிடத்தின் தொட்டியில் அவரது உடலைப் போட்டு மூடி விட்டார். பின்னர், சுந்தரியின் அண்ணன் வளவி என்பவருக்கு போன் செய்து,  உன் தங்கையை கொலை செய்துவிட்டேன், பிணம் வீட்டிலுள்ள கழிப்பிட தொட்டியில் கிடக்கிறது என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

இது குறித்து சுந்தரியின் அண்ணன் வளவி ஊத்துமலை போலீசுக்கு தகவல் சொல்லி விட்டு ஊரிலிருந்து விரைந்து வந்துள்ளார். உடனடியாக ஊத்துமலை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு பாளை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் வளவியின் புகாரின் பேரில் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கொலையாளி ஆறுமுகத்தை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories