நடத்தையில் சந்தேகம்! 2வது மனைவியை கொன்ற கணவனுக்கு வலைவீச்சு!

murder - 2026

நெல்லை மாவட்டம் ஊத்துமலை போலீஸ் சரகத்திற்கு உட்டபட்ட கம்மாவூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சுந்தரி. இவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சலவைத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு வளவி என்ற 5வயது குழந்தை உள்ளது.

ஆறுமுகத்திற்கு நெல்லை தச்சநல்லூரை அடுத்துள்ள ராஜவள்ளிபுரம் பகுதியை சார்ந்த சுந்தரியை 2வதாக திருமணம் செய்து வைத்துள்ளனர். சென்னையில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்தப் பகுதிக்கு குடி வந்துள்ளனர்.

இந்நிலையில் மனைவி சுந்தரியின் நடத்தை மீது கணவன் ஆறுமுகத்திற்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மனைவியை ஆறுமுகம் தாக்கியுள்ளார். இதில் சுந்தரி இறந்து விடவே யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்த கழிப்பிடத்தின் தொட்டியில் அவரது உடலைப் போட்டு மூடி விட்டார். பின்னர், சுந்தரியின் அண்ணன் வளவி என்பவருக்கு போன் செய்து,  உன் தங்கையை கொலை செய்துவிட்டேன், பிணம் வீட்டிலுள்ள கழிப்பிட தொட்டியில் கிடக்கிறது என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

இது குறித்து சுந்தரியின் அண்ணன் வளவி ஊத்துமலை போலீசுக்கு தகவல் சொல்லி விட்டு ஊரிலிருந்து விரைந்து வந்துள்ளார். உடனடியாக ஊத்துமலை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு பாளை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் வளவியின் புகாரின் பேரில் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கொலையாளி ஆறுமுகத்தை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories