கள்ளக்காதலி பிடியில் இருக்கும் கணவனை மீட்டுத் தரக்கோரி பெண் மனு!

kanyakumari majitha petition - 2026

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவரான ஷாகுல் ஹமீது என்பவர் கள்ளக் காதலியிடன் சேர்ந்து தனது சொத்துக்களை அபகரித்து கொண்டதாகவும், இது குறித்து குளச்சல் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் அதிமுக வினரின் தூண்டுதலின் பேரில் தன்னையும், தனது மகளையும் விபசார வழக்கில் கைது செய்து விடுவதாக போலீசார் மிரட்டுவதாகவும், உரிய விசாரணை நடத்தி தனது கணவரை மீட்டு தரக் கோரியும் பாதிக்கப்பட்ட பெண் மாஜிதா (45) என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஐ சந்தித்து புகார் மனு அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டனம் பகுதியை சேர்ந்தவர் மாஜிதா(45). இவருக்கும் குளச்சல் பகுதியை சேர்ந்த அதிமுக எம்ஜிஆர் மன்ற தலைவர் சாகுல் ஹமீது என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது, அப்போது மாஜிதா பெயரில் இருந்த சொத்துக்கள் அனைத்தும் அவரது கணவர் சாகுல் ஹமீது பெயரில் எழுதி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஐசத் பீவி என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்படுத்தி கொண்ட சாகுல் தனது மனைவியிடம் இருந்த நகைகள் மற்றும் சொத்துக்கள் உட்பட அனைத்தையும் வாங்கி கொண்டுவிட்டாராம். தற்போது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து கள்ளக் காதலியுடன் வாழ்ந்து வருகிறார் என்றும், இது தொடர்பாக மாஜிதா குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்போது அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் காவல் நிலைய பெண் ஆய்வாளர் பொன்கீதா தன்னையும் தனது மகள்களையும் விபச்சார வழக்கில் கைது செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த மாஜிதா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத்தை சந்தித்து உரிய விசாரணை மேற்கொண்டு கள்ளக் காதலி பிடியில் இருக்கும் தனது கணவரை மீட்டு தர கூறியும், தன்னை மிரட்டிய குளச்சல் காவல் நிலைய பெண் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோரிக்கை மனு அளித்தார்.

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories