மேக்கேதாட்டு விவகாரத்துக்காக… திருச்சியில் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்!

Published:

stalin cyclone area - 2026

திருச்சி: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யக்கோரி திமுக., கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கூட்டணியில் இல்லாத தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.

உழவர் சந்தை திடலில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களான திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ். திருநாவுக்கரசர், கம்யூனிஸ்ட் தலைவர்கள் கே. பாலகிருஷ்ணன், இரா. முத்தரசன், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் கே.எம். காதர் மொய்தீன், பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்களான மதிமுக., தலைவர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img