கஜா புயல் சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய வேளாண் அமைச்சகம் ரூ173 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது .
ரூ.173 கோடியில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தென்னை மரக் கன்றுகளை நட ரூ93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கஜா புயல் நிவாரணம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார் .
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 6 மாவட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்று உள்ளனர்.
புயல் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்தும், செய்ய வேண்டிய புயல் நிவாரணப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டுள்ளது .