December 6, 2025, 12:19 AM
26 C
Chennai

செங்கோட்டையில் இலவச பொது மருத்துவ முகாம்

1 - 2025நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம், ஸ்ரீமூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர்.

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமிற்கு ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் தலைவர் வேல்சாமி தலைமை தாங்கினார். ரோட்டரி துணை ஆளுநர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் பி.பி.எம் முருகேசன் வரவேற்புரை வழங்கினார். ரோட்டரி மாவட்ட செயலாளர் செல்வகணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்த இலவச பொது மருத்துவ முகாமில் இருதய சிகிச்சை நிபுணர் கிரண்சுகுலால், புற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் க்ரீஷ், எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சகாய ஜோஸ், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 840 நபர்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 40 நபர்களுக்கு இதய அறுவைசிகிச்சை மற்றும் குடல் இறக்கம் உள்ளிட்ட இலவச அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

இம்முகாமில், பொதுமருத்துவம், குழந்தைகள் நலம், பெண்கள் நலம், பொது அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், தோல் மருத்துவம், சிறுநீரக மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், புற்றுநோய், சுகர், பிபி டெஸ்ட், இருதய பரிசோதனைகளான இசிஜி டெஸ்ட், எக்கோ டெஸ்ட் எடுக்கப்பட்டது.

இரண்டாம் ஆண்டு நடத்தப்படும் இந்த இலவச மருத்துவ முகாமில் செங்கோட்டை, புளியரை, தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories