நெல்லை மாவட்டத்தில் 11 புதிய தாசில்தார்கள்! உடனடியாக பணியில் சேர உத்தரவு!

Published:

Tirunelveli Collector Shilpa - 2026

நெல்லை மாவட்டத்தில் 11 புதிய தாசில்தார்களை நியமித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 11 தாசில்தார்கள் கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக பிற மாவட்டங்களில் இருந்து 11 தாசில்தார்கள் நெல்லை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களை தாலுகா வாரியாக பணி நியமனம் செய்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், ஆலங்குளம் தாசில்தாராகவும்,
ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் அம்பை தாசில்தாராகவும்,
திருச்செந்தூர் தில்லைப்பாண்டி சங்கரன்கோவில் தாசில்தாராகவும்,
சாத்தான்குளம் ஞானராஜ் பாளையங்கோட்டை தாசில்தாராகவும்,
ஓட்டப்பிடாரம் காளிராஜ், நெல்லை தாசில்தாராகவும்,
எட்டயபுரம் வதனாள் வீரகேரளம்புதூர் தாசில்தாராகவும்,
விளாத்திகுளம் ராஜ்குமார் தென்காசி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அணில்குமார் சிவகிரி தாசில்தாராகவும்,
தோவாளை சொக்கலிங்கம் நாங்குநேரி தாசில்தாராகவும்,
கல்குளம் ராஜாசிங் ராதாபுரம் தாசில்தாராகவும்,
விளவங்கோடு புரந்தரதாஸ் செங்கோட்டை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

அவர்கள் உடனடியாக பணியில் சேரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img