வேண்டுமானால் மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம்: நீதிமன்றம்!

12 July30 Maran Brothers - 2026

வேண்டும் என்றால் மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது. இந்தக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி மாறன் சகோதரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

மாறன் சகோதரர்களின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றச் சாட்டைப் பதிவு செய்திருக்கும் சிபிஐ, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று சிபிஐ தரப்பு கூறுவதால், மாறன் சகோதரர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தப் பட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் தயாநிதி மாறன், கலாநிதி மாறனை சிறையில் அடைத்தும் கூட விசாரிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

maran brothers - 2026

சிபிஐ., தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கை மாறன் சகோதரர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றும், 4 மாதத்துக்குள் இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

முன்னர் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். கண்ணாடி இழை அதிவேக தொலைபேசி இணைப்புகளை அளித்து, அரசுச் சொத்தினை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இத்தகைய சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தினார்கள் என்று முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும் சன் டிவி உரிமையாளருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையும் படியுங்க…

சன் டிவியை ஒழிக்க முயல்கிறார்கள்: கலாநிதி மாறன்

விடாமல் துரத்தும் சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு! மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி!

இதை அடுத்து, இந்த மோசடி தொடர்பாக மாறன் சகோதரர்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். பொது மேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளரான கெளதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்தது. இதனை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது!

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

மேலும், வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டு, மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”35″ order=”desc”]


முன்னதாக மாறன் சகோதரர்கள் இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவுக்காக ஆஜராவதிலிருந்து விலக்குஜ் அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக விசாரணை நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை அடுத்து இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாறன் சகோதரர்கள், கே.பிரம்மநாதன், வேலுச்சாமி, கெளதமன், கண்ணன், ரவி 7 பேரும் ஆஜர் ஆனார்கள். அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேருக்கும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தனித்தனியாக வாசித்துக்காட்டி அவற்றைப் பதிவு செய்தார் நீதிபதி.

அப்போது தன் மீதான குற்றச்சாட்டுக்களை தயாநிதி மாறன் மறுத்தார். இந்த வழக்கில் சிபிஐ தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டு புனையப்பட்டவை என்றும், தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தினேன் என்பதை நிரூபிக்கும் வகையில் சிபிஐ போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறினார்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

மேலும், யூகத்தின் அடிப்படையில் சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறி மறுத்தார்.

கலாநிதி மாறனும், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆவணங்களில் ஒரு இடத்தில் கூட தன் பெயர் இடம்பெறவில்லை என்றும், அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதே போல் மற்றவர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தனர். இந்த நிலையில், சிபிஐ., தரப்புக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்த நீதிபதி, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள் எனும் பட்சத்தில், வேண்டுமென்றால் அவர்களைக் கைது செய்து விசாரிக்கலாம் என்று கூறினார்.

மத்திய சென்னை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தயாநிதி மாறனை கைது செய்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்ட நீதிபதியின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


[poll id=”12″]


 

1 COMMENT

  1. உடனே கைது நடவடிக்கை தேவை. மக்களுக்கு உண்மை theriyavendum.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories