உடலுறுப்புகாக இருவர் கொலையா? தனியார் மருத்துவமனையால் அதிர்ச்சி!

udal urppu 2 - 2026

சிகிச்சைக்காக வந்த இருவரைக் கொன்று உடலுறுப்பு திருடப் பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளால், திருச்சி மருத்துவமனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மருத்துவமனை ஒன்றில் விபத்தில் காயமடைந்த இருவரை, உடலுறுப்புகளுக்கான கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த மாரியப்பன். இவரது மனைவி மீரா(51), மகன் தினேஷ்குமார் (31). வெல்டிங் பட்டறையில் தினேஷ் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி மீரா, தினேஷ்குமார் மற்றும் அவரது தாயார் மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்றனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் சுக்காம்பார் என்ற இடத்தில் மரத்தில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் மீராவும், தினேஷ்குமாரும் படுகாயமடைந்தனர். 2 பேரும் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையை சேர்ந்த இடைத்தரகர் ஒருவர், தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அவர், அங்கிருந்த மீரா, தினேஷ்குமாரை சந்தித்து, தங்களது மருத்துவமனையில் குறிப்பிட்ட நபர்களுக்கு இலவச சிகிச்சை செய்ய இருப்பதாகக் கூறியுள்ளார். அதன்படி தங்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதாகவும், மருந்துகளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும் என்றும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தாய் மற்றும் மகனை தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களது ஆம்புலன்சில் திருச்சிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். கடந்த 13ஆம் தேதி மீரா மூளைச்சாவு அடைந்ததாக, அவரது உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தால் பிறருக்கு பயன்படும் எனவும் மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர்.

இதனால் மீராவின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இந்நிலையில் 16ஆம் தேதி தினேஷ்குமார் இறந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்த தினேஷ்குமாரும் இறந்தது, அவரது உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இதனால் தினேஷ்குமாரின் உறவினர்கள் தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் மீரா மற்றும் அவரது மகன் தினேஷ்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மீராவிடம் இருந்து இரண்டு உறுப்புக்கு அனுமதி பெற்று விட்டு 11 உறுப்புகள் எடுத்துள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.

மீராவின் உடல் உறுப்புகளை எடுத்ததில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்திருந்தனர். இந்தப் புகார் தொடர்பாக தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் தினேஷ்குமாரின் உடல் திருச்சி பிரேத பரிசோதனை கூடத்தில் உள்ளது. விபத்து தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 நாட்களாகியும் தினேஷின் உடல் உறவினர்களிடம் தராமல் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உறுப்பு திருட்டு தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களை மிரட்டுவதாகவும் தினேஷின் உறவினா்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 COMMENT

  1. இதைப்போல மருத்துவ மனைகள் மனித உயிர்களோடு விளையாடும் என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. நம் அரசின் சுகாதாரத்துறை என்ன செய்கிறது ? அரசியல்வாதிகள் ஏன் போராட்டம் நடத்தவில்லை ? எல்லோருமே கூட்டாளிகளா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories