உல்லாசத்திற்கு இடைஞ்சல்; மகளை கொன்ற தாய் கைது….!

gggg - 2026

தமிழகத்தில் காதல் மற்றும் கள்ளக்காதல் சம்பவங்களில் உயிர் பலிகள் அதிகரித்து வருகிறது.

காமம் உயிர் வளா்க்கும் முறைதவறிய காமம் உயிர் பலி வாங்கும் காமத்தல் உருவாகும் கரு சந்நததிகளை உருவாக்கும் முறைதவறிய காமத்தால் கருவில் உருவான ஏதுமறிய அப்பாவி சந்ததிகள் உயிர் பலியாகும் கொடுமைகள் உச்சத்தை எட்டிக்கொண்டெ வருகிறது. அப்படி ஒரு நிகழ்வு நம்மை கண்கலங்க செய்கிறது.

தொட்டியம் உல்லாசத்திற்கு தடையாக உள்ளதாக கருதி தான் பெற்ற மகளை கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஆசிரியை அடித்து கொன்றுள்ளார்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் பிரசன்னா (42). தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதிவேலை செய்து வருகிறார். இவரது மனைவி நித்யகமலா(32). திண்டுக்கல்லை சேர்ந்த இவர், எம்.எஸ்.சி. படித்துள்ளார். இவர்களுக்கு லத்திகா (5) என்ற மகள் இருந்தாள்.

இந்நிலையில் பிரச்சனாவுக்கும் நித்யகமலாவுக்கும் அடிக்கடி ஏற்பட்டு வந்த குடும்ப தகராறு காரணமாக 3 வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். மேலும் இவர்களது விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

மகளுடன் தனியாக வசித்த நித்யகமலா, தொட்டியத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

அப்போது நித்யகமலாக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த முத்துப்பாண்டியன் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் அங்காளம்மன் கோயிலுக்கு முத்துப்பாண்டி நித்யகமலாவையும், லத்திகாவையும் அழைத்துச் சென்றார்.

அந்த பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். வீட்டு உரிமையாளரிடம் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வேலை கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை லத்திகாயை படுகாயத்துடன் காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு நித்யகமலா கொண்டு சென்றுள்ளார்.

பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், வழியிலேயே லத்திகா இறந்தாள். இதனிடையே, காட்டுப்புத்தூர் போலீசார் சேலம் சென்று நித்யகமலாவிடம் விசாரித்ததில் லத்திகாவை அடித்து கொடுமைப்படுத்தியது தெரியவந்தள்ளது.

மேலும், சேலம் மருத்துவமனையில் போலீசாரை கண்டதும் முத்துப்பாண்டி தப்பியோடி தலைமறைவானார். இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி சேலம் டவுன் பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்த முத்துப்பாண்டியை சுற்றிவளைத்தனர்

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

இருவரையும் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சம்பவத்தன்று 2 பேரும் அரைகுறை ஆடையுடன் தனிமையில் இருப்பதை லத்திகா பார்த்திருக்கிறாள்

இதனால் அதிர்ச்சியடைந்த நித்யகமலா சிறுமியை அடித்து உதைத்து டி.வி.யை பாரு என்றுகூறி விரட்டி உள்ளார்.

வலிதாங்க முடியாத சிறுமியோ அழுதபடி இருந்துள்ளாள். இதனால், 2 பேரும் ஆத்திரமடைந்து லத்திகாயை வயரால் கடுமையாக அடித்து உள்ளனர். இதில், அவள் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து, நித்யகமலாவின் முதல் கணவர் பிரசன்னாவை திண்டுக்கல்லில் இருந்து வரவழைத்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின்பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories