December 5, 2025, 5:21 PM
27.9 C
Chennai

அரசு வேலைவாங்கி தருவதாக கூறி ரூ 21½ . லட்சம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் பெண் வருவாய் ஆய்வாளா் கைது….!

RUBA 2 - 2025

சுரண்டை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.21½ லட்சம் மோசடி செய்ததாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் வருவாய் ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் சுரண்டை காந்தி பஜார் பகுதியை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியன் மனைவி அழகுரமா (வயது 39). இவர் கடந்த 2012-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்தார்.

பின்னர் சில வருடங்களில் பதவி உயர்வு பெற்று பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த சங்கரசுப்பிரமணியன் தந்தை பிரம்மநாயகம் கொலை வழக்கில் அழகுரமா ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து அழகுரமா கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சுரண்டை அருகே உள்ள அழகாபுரிபட்டினத்தை சேர்ந்த குமாரி (30) என்பவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் வரை வாங்கியுள்ளார்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த இசக்கிராஜ் (28) என்பவரிடம், சிவகிரி தாலுகா அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் பேரம் பேசி, ரூ.1½ லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் வெகு நாட்களாகியும் பணம் வாங்கிய இருவருக்கும் வேலை வாங்கிக் கொடுக் காமல், பணத்தை திருப்பி தராமலும் அழகுரமா ஏமாற்றி வந்தார். இதுகுறித்து சுரண்டை போலீசில் குமாரி, இசக்கிராஜ் ஆகிய இருவரும் தனித்தனியே புகார் செய்தனர்.

இதனையடுத்து போலீசார் விசாரணையில், மேற்கண்ட தகவல்கள் உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேசன் நேற்று காலை அழகுரமாவை கைது செய்தார்.

ஆலங்குளம் துணை சூப்பிரண்டு சுபாஷினி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

அழகுரமா இதுபோன்று பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories