அரசு வேலைவாங்கி தருவதாக கூறி ரூ 21½ . லட்சம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் பெண் வருவாய் ஆய்வாளா் கைது….!

RUBA 2 - 2026

சுரண்டை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.21½ லட்சம் மோசடி செய்ததாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் வருவாய் ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் சுரண்டை காந்தி பஜார் பகுதியை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியன் மனைவி அழகுரமா (வயது 39). இவர் கடந்த 2012-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்தார்.

பின்னர் சில வருடங்களில் பதவி உயர்வு பெற்று பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த சங்கரசுப்பிரமணியன் தந்தை பிரம்மநாயகம் கொலை வழக்கில் அழகுரமா ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து அழகுரமா கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சுரண்டை அருகே உள்ள அழகாபுரிபட்டினத்தை சேர்ந்த குமாரி (30) என்பவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் வரை வாங்கியுள்ளார்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த இசக்கிராஜ் (28) என்பவரிடம், சிவகிரி தாலுகா அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் பேரம் பேசி, ரூ.1½ லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் வெகு நாட்களாகியும் பணம் வாங்கிய இருவருக்கும் வேலை வாங்கிக் கொடுக் காமல், பணத்தை திருப்பி தராமலும் அழகுரமா ஏமாற்றி வந்தார். இதுகுறித்து சுரண்டை போலீசில் குமாரி, இசக்கிராஜ் ஆகிய இருவரும் தனித்தனியே புகார் செய்தனர்.

இதனையடுத்து போலீசார் விசாரணையில், மேற்கண்ட தகவல்கள் உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேசன் நேற்று காலை அழகுரமாவை கைது செய்தார்.

ஆலங்குளம் துணை சூப்பிரண்டு சுபாஷினி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

அழகுரமா இதுபோன்று பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories