அரசு வேலைவாங்கி தருவதாக கூறி ரூ 21½ . லட்சம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் பெண் வருவாய் ஆய்வாளா் கைது….!

RUBA 2 - 2026

சுரண்டை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.21½ லட்சம் மோசடி செய்ததாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் வருவாய் ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் சுரண்டை காந்தி பஜார் பகுதியை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியன் மனைவி அழகுரமா (வயது 39). இவர் கடந்த 2012-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்தார்.

பின்னர் சில வருடங்களில் பதவி உயர்வு பெற்று பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த சங்கரசுப்பிரமணியன் தந்தை பிரம்மநாயகம் கொலை வழக்கில் அழகுரமா ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து அழகுரமா கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சுரண்டை அருகே உள்ள அழகாபுரிபட்டினத்தை சேர்ந்த குமாரி (30) என்பவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.20 லட்சம் வரை வாங்கியுள்ளார்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த இசக்கிராஜ் (28) என்பவரிடம், சிவகிரி தாலுகா அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் பேரம் பேசி, ரூ.1½ லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் வெகு நாட்களாகியும் பணம் வாங்கிய இருவருக்கும் வேலை வாங்கிக் கொடுக் காமல், பணத்தை திருப்பி தராமலும் அழகுரமா ஏமாற்றி வந்தார். இதுகுறித்து சுரண்டை போலீசில் குமாரி, இசக்கிராஜ் ஆகிய இருவரும் தனித்தனியே புகார் செய்தனர்.

இதனையடுத்து போலீசார் விசாரணையில், மேற்கண்ட தகவல்கள் உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேசன் நேற்று காலை அழகுரமாவை கைது செய்தார்.

ஆலங்குளம் துணை சூப்பிரண்டு சுபாஷினி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

அழகுரமா இதுபோன்று பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories