நெல்லை மாவட்டத்தில் 17 துணை தாசில்தார்கள் இடமாற்றம்

 

silpa - 2026

திருநெல்வேலி மாவட்டத்தில் 17 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவு….!

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் ஆறுமுகம், ஆலங்குளம் வட்ட வழங்கல் அலுவலராகவும், நாங்குநேரி தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்து மருத்துவ விடுப்பில் சென்ற ஜெயா, நாங்குநேரி வட்ட வழங்கல் அலுவலராகவும், நாங்குநேரி தலைமையிடத்து துணை தாசில்தார் வேல்முருகன், திசையன்விளை வட்ட வழங்கல் அலுவலராகவும், பாளையங்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்வேல், கனிம வளத்துறை துணை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

துணைதாசில்தார் பதவியில் இருந்து பணி இறக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் துணை தாசில்தார் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்ட வருவாய் அலுவலக வருவாய் ஆய்வாளர் முத்துலட்சுமி, மானூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், தனி வருவாய் ஆய்வாளர் மகாராஜன் நெல்லை உதவி கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், கோட்ட கலால் அலுவலக வருவாய் ஆய்வாளர் மணி நாங்குநேரி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்று உள்ளனர்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

சேரன்மாதேவி ஆதி திராவிடர் நலத்துறை வருவாய் ஆய்வாளர் சங்கரன், கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், மாவட்ட ஆய்வு குழு வருவாய் ஆய்வாளர் சண்முகவேல், ராதாபுரம் வட்ட வழங்கல் அலுவலராகவும், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், சிவகிரி துணை தாசில்தாராகவும், மாவட்ட வருவாய் அலுவலக வருவாய் ஆய்வாளர் நக்கீரன், நெல்லை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்று உள்ளனர்.

நெல்லை கோட்ட கலால் அலுவலக வருவாய் ஆய்வாளர் முத்துலட்சுமி, பாளையங்கோட்டை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலக வருவாய் ஆய்வாளர் வீரமணி, ராதாபுரம் துணை தாசில்தாராகவும், தென்காசி கோட்ட கலால் அலுவலக வருவாய் ஆய்வாளர் மைதீன் பாட்ஷா, மானூர் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், தேசிய நெடுஞ்சாலை திட்ட வருவாய் ஆய்வாளர் சீனிபாண்டி, பாளையங்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும், தேசிய நெடுஞ்சாலை திட்ட வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வி, கடையநல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், தென்காசி உதவி கலெக்டர் அலுவலக வருவாய் ஆய்வாளர் சிவன்பெருமாள், கடையநல்லூர் துணை தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்று உள்ளனர்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இதற்கான உத்தரவை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிறப்பித்து உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories