நெல்லை மாவட்டத்தில் 17 துணை தாசில்தார்கள் இடமாற்றம்

 

silpa - 2026

திருநெல்வேலி மாவட்டத்தில் 17 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவு….!

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் ஆறுமுகம், ஆலங்குளம் வட்ட வழங்கல் அலுவலராகவும், நாங்குநேரி தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்து மருத்துவ விடுப்பில் சென்ற ஜெயா, நாங்குநேரி வட்ட வழங்கல் அலுவலராகவும், நாங்குநேரி தலைமையிடத்து துணை தாசில்தார் வேல்முருகன், திசையன்விளை வட்ட வழங்கல் அலுவலராகவும், பாளையங்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்வேல், கனிம வளத்துறை துணை தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

துணைதாசில்தார் பதவியில் இருந்து பணி இறக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் துணை தாசில்தார் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்ட வருவாய் அலுவலக வருவாய் ஆய்வாளர் முத்துலட்சுமி, மானூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், தனி வருவாய் ஆய்வாளர் மகாராஜன் நெல்லை உதவி கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், கோட்ட கலால் அலுவலக வருவாய் ஆய்வாளர் மணி நாங்குநேரி தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்று உள்ளனர்.

சேரன்மாதேவி ஆதி திராவிடர் நலத்துறை வருவாய் ஆய்வாளர் சங்கரன், கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், மாவட்ட ஆய்வு குழு வருவாய் ஆய்வாளர் சண்முகவேல், ராதாபுரம் வட்ட வழங்கல் அலுவலராகவும், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், சிவகிரி துணை தாசில்தாராகவும், மாவட்ட வருவாய் அலுவலக வருவாய் ஆய்வாளர் நக்கீரன், நெல்லை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்று உள்ளனர்.

நெல்லை கோட்ட கலால் அலுவலக வருவாய் ஆய்வாளர் முத்துலட்சுமி, பாளையங்கோட்டை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலக வருவாய் ஆய்வாளர் வீரமணி, ராதாபுரம் துணை தாசில்தாராகவும், தென்காசி கோட்ட கலால் அலுவலக வருவாய் ஆய்வாளர் மைதீன் பாட்ஷா, மானூர் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், தேசிய நெடுஞ்சாலை திட்ட வருவாய் ஆய்வாளர் சீனிபாண்டி, பாளையங்கோட்டை வட்ட வழங்கல் அலுவலராகவும், தேசிய நெடுஞ்சாலை திட்ட வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வி, கடையநல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், தென்காசி உதவி கலெக்டர் அலுவலக வருவாய் ஆய்வாளர் சிவன்பெருமாள், கடையநல்லூர் துணை தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்று உள்ளனர்.

இதற்கான உத்தரவை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிறப்பித்து உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories