December 7, 2025, 4:34 AM
24.5 C
Chennai

தமிழக விவசாயிகள் ரூ.6000 மானியம் பெறுவதில் உள்ள தடைகளை களைய வேண்டும்; ராமதாஸ் வலியுறுத்தல்…!

RAMADAS 2 1 - 2025

 

 

விவசாயிகள் ரூ.6000 மானியம் பெறுவதில் உள்ள தடைகளை களைய வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறித்தி உள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.6000 நிதி உதவியை தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகளால் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், இத்திட்டத்திற்கான அடிப்படை தகுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும்பான்மை சமூகமாக உள்ள விவசாயிகள், பொருளாதார அடிப்படையில் தன்னிறைவு பெறுவது பெறும் சவாலாக இநருந்து வருகிறது.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கப்படாதது. வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவது, உரம், விதைகள் உள்ளிட்ட இடுபொருட்களின் விலைகள் பெருமளவில் உயர்ந்திருப்பது ஆகியவற்றால் வேளாண் தொழிலில் லாபம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

இதனால் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் விவசாயிகளின் துயரத்தை ஓரளவாவது குறைக்கும் நோக்கில் தான் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக பாமக வலியுறித்தி வந்தது.

அதையொட்டி தான் சிறுகுறு விவசாயிகளுக்கு தலா ரூ.6000 நிதி வழங்கப்படும், ஆண்டுக்கு 3 தவணைகளில் இது வழங்கப்படும் என்று இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசு அறிவித்த திட்டத்தின்படி தமிழகத்தில் 75 லட்சம் விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி கிடைத்திருக்க வேண்டும்,

ஆனால் தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி முதற்கட்டமாக தமிழக விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ரூ.277 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைக் கொண்டு 13.85 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் தான் மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கூட தமிழகத்தில் தகுதி உள்ள 75 லட்சம் விவசாயிகளில் 22 லட்சம் விவசாயிகளின் ஆவணங்கள் மட்டும் சரிபார்க்கப்பட்டு மத்திய அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 53 லட்சம் விவசாயிகளுக்கு அதாவது தகுதி உடைய விவசாயிகளில் 70.86 விழுக்காட்டினருக்கு பிரதமாின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன் கிடைக்கவி்ல்லை

இதற்கான முதன்மைக் காரணம் இந்தத் திட்டத்தின் கீழ் நிதிஉதவி பெறுவதற்கான நிபந்தனைகளை விவசாயிகளால் பூர்த்தி செய்ய முடியாததுதான்.

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 உதவி பெற விண்ணப்பிக்கும் விவசாயி பெயரில் தான் நிலத்தின் பட்டா இருக்க வேண்டும், அத்துடன் குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றையும் விவசாயிகள் தாக்கல் செய்ய வேண்டும் ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு அவா்களின் நிலங்களுக்கான பட்டா அவா்களின் பெயரில் இருப்பத்தில்லை.

தமிழகத்தில் நில ஆவணங்கள் முழுமையாக சரிபார்க்கப்படாதத, ஒரு குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை அதன் வாரிசுகள் தங்களுக்குள் பிரித்துக் கொண்டாலம், அதை அவா்கள் பதிவு செய்து தங்கள் பெயரில் பட்டா வாங்கத் தவறியது, நிலங்களை விலைக்கு வாங்கினாலும் அதை பத்திரபதிவு செய்வதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக கருதி பட்டா வாங்க மறந்த விடுவது போன்றவைதான் நில ஆவணங்கள் துல்லியமாக இல்லாததற்கு காரணமாகும்,

இதை சரிசெய்ய கடந்த காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை முழுமையான பலனைத் தராததால் சிக்கல்கள் நீடிக்கிறது.

மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான அரசு மீண்டும் பதியேற்ற பின்னர், சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த இந்தத் திட்டம் அனைத்து விவசாயிகளு்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி தமிழகத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை 81.18 லட்சமாக உயரும் இவர்களில் 25 சதவீதத்துக்கும் குறைவானவா்களுக்கு மட்டும் நிதி உதவி வழங்கப்பட்டால், அத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கே அா்த்தம் இல்லாமல் போய்விடும் விவசாயிகளின் துயரங்களும், தற்கொலைகளும் தொடா்கதையாகி விடும்.

எனவே விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் செய்து வழங்க சிறப்பு இயக்கத்தை அரசு நடத்த வேண்டும். கிராம அளவில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்து, அதில் உரிய ஆவணங்களை அளிக்கும் விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் செய்து, பிரதமரின் நிதி உதவித் திட்ட பயனாளிகள் பட்டியலில் பெயரைச் சேர்க்க வேண்டும்.

தகுதி உடைய சிறு. குறு விவசாயிகளுக்கு டிசம்பர்–மார்ச் காலத்திற்கான ரூ.2000 நிதியை நிலுவைத் தொகையாக கணக்கிட்டு வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories