தமிழக விவசாயிகள் ரூ.6000 மானியம் பெறுவதில் உள்ள தடைகளை களைய வேண்டும்; ராமதாஸ் வலியுறுத்தல்…!

RAMADAS 2 1 - 2026

 

 

விவசாயிகள் ரூ.6000 மானியம் பெறுவதில் உள்ள தடைகளை களைய வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறித்தி உள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.6000 நிதி உதவியை தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகளால் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், இத்திட்டத்திற்கான அடிப்படை தகுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும்பான்மை சமூகமாக உள்ள விவசாயிகள், பொருளாதார அடிப்படையில் தன்னிறைவு பெறுவது பெறும் சவாலாக இநருந்து வருகிறது.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கப்படாதது. வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவது, உரம், விதைகள் உள்ளிட்ட இடுபொருட்களின் விலைகள் பெருமளவில் உயர்ந்திருப்பது ஆகியவற்றால் வேளாண் தொழிலில் லாபம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

இதனால் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் விவசாயிகளின் துயரத்தை ஓரளவாவது குறைக்கும் நோக்கில் தான் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக பாமக வலியுறித்தி வந்தது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

அதையொட்டி தான் சிறுகுறு விவசாயிகளுக்கு தலா ரூ.6000 நிதி வழங்கப்படும், ஆண்டுக்கு 3 தவணைகளில் இது வழங்கப்படும் என்று இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசு அறிவித்த திட்டத்தின்படி தமிழகத்தில் 75 லட்சம் விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி கிடைத்திருக்க வேண்டும்,

ஆனால் தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி முதற்கட்டமாக தமிழக விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ரூ.277 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைக் கொண்டு 13.85 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் தான் மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கூட தமிழகத்தில் தகுதி உள்ள 75 லட்சம் விவசாயிகளில் 22 லட்சம் விவசாயிகளின் ஆவணங்கள் மட்டும் சரிபார்க்கப்பட்டு மத்திய அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 53 லட்சம் விவசாயிகளுக்கு அதாவது தகுதி உடைய விவசாயிகளில் 70.86 விழுக்காட்டினருக்கு பிரதமாின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன் கிடைக்கவி்ல்லை

இதற்கான முதன்மைக் காரணம் இந்தத் திட்டத்தின் கீழ் நிதிஉதவி பெறுவதற்கான நிபந்தனைகளை விவசாயிகளால் பூர்த்தி செய்ய முடியாததுதான்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 உதவி பெற விண்ணப்பிக்கும் விவசாயி பெயரில் தான் நிலத்தின் பட்டா இருக்க வேண்டும், அத்துடன் குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றையும் விவசாயிகள் தாக்கல் செய்ய வேண்டும் ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு அவா்களின் நிலங்களுக்கான பட்டா அவா்களின் பெயரில் இருப்பத்தில்லை.

தமிழகத்தில் நில ஆவணங்கள் முழுமையாக சரிபார்க்கப்படாதத, ஒரு குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை அதன் வாரிசுகள் தங்களுக்குள் பிரித்துக் கொண்டாலம், அதை அவா்கள் பதிவு செய்து தங்கள் பெயரில் பட்டா வாங்கத் தவறியது, நிலங்களை விலைக்கு வாங்கினாலும் அதை பத்திரபதிவு செய்வதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக கருதி பட்டா வாங்க மறந்த விடுவது போன்றவைதான் நில ஆவணங்கள் துல்லியமாக இல்லாததற்கு காரணமாகும்,

இதை சரிசெய்ய கடந்த காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை முழுமையான பலனைத் தராததால் சிக்கல்கள் நீடிக்கிறது.

மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான அரசு மீண்டும் பதியேற்ற பின்னர், சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த இந்தத் திட்டம் அனைத்து விவசாயிகளு்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி தமிழகத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை 81.18 லட்சமாக உயரும் இவர்களில் 25 சதவீதத்துக்கும் குறைவானவா்களுக்கு மட்டும் நிதி உதவி வழங்கப்பட்டால், அத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கே அா்த்தம் இல்லாமல் போய்விடும் விவசாயிகளின் துயரங்களும், தற்கொலைகளும் தொடா்கதையாகி விடும்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

எனவே விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் செய்து வழங்க சிறப்பு இயக்கத்தை அரசு நடத்த வேண்டும். கிராம அளவில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்து, அதில் உரிய ஆவணங்களை அளிக்கும் விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் செய்து, பிரதமரின் நிதி உதவித் திட்ட பயனாளிகள் பட்டியலில் பெயரைச் சேர்க்க வேண்டும்.

தகுதி உடைய சிறு. குறு விவசாயிகளுக்கு டிசம்பர்–மார்ச் காலத்திற்கான ரூ.2000 நிதியை நிலுவைத் தொகையாக கணக்கிட்டு வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories