சென்னைவாசிகளே உஷார்! ஹெல்மெட் போடாம ஊர் சுத்துனா… வீட்டுக்கே வரும் சம்மன்!

CCTV - 2026

ஹெல்மெட் அணியாவிட்டால் வீடு தேடி சம்மன் வரும் எச்சரிக்கை! கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் வீடுகளுக்கு சம்மன் அனுப்பும் திட்டத்தை சென்னை போலீசார் துவக்கியுள்ளனர் !

சென்னையில் குற்றங்களை குறைக்கவும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்களை போலீசார் பொருத்தி இருக்கிறார்கள்

சென்னையைப் பொறுத்தவரை அனைத்து பிரதான சாலைகளிலும் கேமராக்கள் பொருத்தப் பட்டிருக்கின்றன. இதனால் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை எளிதாக அடையாளம் காண முடியும் என்கிறார்கள் போலிசார்!

தற்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் மீது போலீசாரின் கவனம் திரும்பியுள்ளது!

சிக்னல்களை மீறுதல், இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தல் என போக்குவரத்து விதிமீறல் ஈடுபடுபவர்களின் படத்துடன் அவர்களின் வீடுகளுக்கு சம்மன் அனுப்பும் திட்டத்தை சென்னை போலீசார் தொடங்கியிருக்கிறார்கள்!

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்த போது சென்னையில் உள்ள இரண்டரை லட்சம் சிசிடிவி கேமரா பதிவுகளை அந்தந்த பகுதி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்! அதன் வாயிலாக போக்குவரத்து விதிமீறல் ஈடுபடுபவர்களின் வீடுகளுக்கு சம்பந் அனுப்பும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். அண்மையில் போக்குவரத்து போலீசாருக்கு அதிநவீன கருவி வழங்கப்பட்டது.

இதில் விதி மீறலில் ஈடுபட்டு வரும் வாகன பதிவு எண்ணை குறிப்பிட்டால் வீட்டு முகவரி, அவர் எத்தனை முறை போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு உள்ளார், கட்டிய அபராத தொகை எவ்வளவு என அனைத்து விவரங்களும் தெரிந்துவிடும்!

தற்போது சம்மன் அனுப்பிய விவரம், நாடு முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கும் சென்று விடும்! எனவே விதி மீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தாமல் நாட்டில் எந்த இடத்திலும் வாகனத்தை ஓட்ட முடியாது!

முதல் கட்டமாக அண்ணாநகர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கேமரா காட்சியில் பதிவுகளை ஆய்வு செய்துள்ளோம்!

90,000 பேர் போக்குவரத்து விதிமீறல் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது! அவர்கள் செலுத்த வேண்டிய அபராத தொகை உள்ளிட்ட விவரங்களுடன் தபாலில் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது என்றனர்!

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories