December 6, 2025, 1:33 PM
29 C
Chennai

சென்னைவாசிகளே உஷார்! ஹெல்மெட் போடாம ஊர் சுத்துனா… வீட்டுக்கே வரும் சம்மன்!

CCTV - 2025

ஹெல்மெட் அணியாவிட்டால் வீடு தேடி சம்மன் வரும் எச்சரிக்கை! கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் வீடுகளுக்கு சம்மன் அனுப்பும் திட்டத்தை சென்னை போலீசார் துவக்கியுள்ளனர் !

சென்னையில் குற்றங்களை குறைக்கவும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்களை போலீசார் பொருத்தி இருக்கிறார்கள்

சென்னையைப் பொறுத்தவரை அனைத்து பிரதான சாலைகளிலும் கேமராக்கள் பொருத்தப் பட்டிருக்கின்றன. இதனால் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை எளிதாக அடையாளம் காண முடியும் என்கிறார்கள் போலிசார்!

தற்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் மீது போலீசாரின் கவனம் திரும்பியுள்ளது!

சிக்னல்களை மீறுதல், இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தல் என போக்குவரத்து விதிமீறல் ஈடுபடுபவர்களின் படத்துடன் அவர்களின் வீடுகளுக்கு சம்மன் அனுப்பும் திட்டத்தை சென்னை போலீசார் தொடங்கியிருக்கிறார்கள்!

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்த போது சென்னையில் உள்ள இரண்டரை லட்சம் சிசிடிவி கேமரா பதிவுகளை அந்தந்த பகுதி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்! அதன் வாயிலாக போக்குவரத்து விதிமீறல் ஈடுபடுபவர்களின் வீடுகளுக்கு சம்பந் அனுப்பும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். அண்மையில் போக்குவரத்து போலீசாருக்கு அதிநவீன கருவி வழங்கப்பட்டது.

இதில் விதி மீறலில் ஈடுபட்டு வரும் வாகன பதிவு எண்ணை குறிப்பிட்டால் வீட்டு முகவரி, அவர் எத்தனை முறை போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு உள்ளார், கட்டிய அபராத தொகை எவ்வளவு என அனைத்து விவரங்களும் தெரிந்துவிடும்!

தற்போது சம்மன் அனுப்பிய விவரம், நாடு முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கும் சென்று விடும்! எனவே விதி மீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தாமல் நாட்டில் எந்த இடத்திலும் வாகனத்தை ஓட்ட முடியாது!

முதல் கட்டமாக அண்ணாநகர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கேமரா காட்சியில் பதிவுகளை ஆய்வு செய்துள்ளோம்!

90,000 பேர் போக்குவரத்து விதிமீறல் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது! அவர்கள் செலுத்த வேண்டிய அபராத தொகை உள்ளிட்ட விவரங்களுடன் தபாலில் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது என்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories