சென்னை வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க படகுகள் தீயணைப்பு வீரர்கள்..

ChennaiRains EPS 1 - 2026

சென்னை வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க 40 படகுகள்: தயார் நிலையில் 900 தீயணைப்பு வீரர்கள் உள்ளனர்.

சென்னை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பதற்கு வசதியாக 40 படகுகள் தயாராக உள்ளன. காவல் துறை மற்றும் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைகளுடன் தீயணைப்பு வீரர்கள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

வடகிழக்கு பருவமழை தீவிரமாகி இருப்பதை தொடர்ந்து சென்னையில் தீயணைப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் நேரங்களில் மக்களை அதில் இருந்து காப்பாற்றி வெளியில் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். சென்னையில் தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னையில் உள்ள 42 தீயணைப்பு நிலையங்களிலும் நிலைய அதிகாரிகள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பதற்கு வசதியாக 40 படகுகள் தயாராக உள்ளன. அதே போன்று 40 மின்மோட்டார்களையும் தீயணைப்பு அதிகாரிகள் தயார்படுத்தி வைத்து உள்ளனர். தீயணைப்பு துறையில் பணியில் உள்ள அதிகாரிகள் முதல் களப்பணியாற்றும் வீரர்கள் வரை அத்தனை பேரும் மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்கு வசதியாக 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் என 900 பேர் 24 மணி நேரமும் பணியில் உள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மழை பாதிப்பின் போது சாலைகளில் சாய்ந்து விழும் மரங்கள் மற்றும் முறிந்து விழும் மரங்களை அகற்றுவதற்கும் தீயணைப்பு வீரர்கள் தயாராக உள்ளனர். இதற்காக ‘பவர் ஷா’ எனறு அழைக்கப்படும் மரம் அறுக்கும் எந்திரங்களையும் தீயணைப்பு அதிகாரிகள் தயார்படுத்தி வைத்து உள்ளனர். இது தவிர 3 பெரிய மோட்டார் பம்புகளும் தயாராக உள்ளன. சென்னை மாநகராட்சி, காவல்துறை ஆகியோர்களுடன் தீயணைப்பு துறையினர் இணைந்து செயல்படும் வகையில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன. இதற்காக காவல் துறை மற்றும் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைகளுடன் தீயணைப்பு வீரர்கள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இதன் மூலம் பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து செல்ல வழி ஏற்படுவதுடன் மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெறும் என்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

1785602 annanagar - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories