சென்னை கடற்கரை – தாம்பரம் தடத்தில் மின்சார ரயில் சேவை பாதிப்பு..

images 2022 11 24T131504.387 - 2026

சென்னையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலுக்கான மின்கடத்தும் கருவியில் ஏற்பட்ட பழுது காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதேபோன்ற பிரச்சினையின் எதிரொலியாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று மதியம் 1:25 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் புறப்பட்டது. அப்போது, ரயிலில் மின்சாரத்தைக் கடத்தும் ‘பேன்டோகிராஃப்’ என்ற கருவியில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், மின்சாரம் தடைப்பட்டு ரயில் நின்றது. இதையடுத்து, ரயில் ஓட்டுநர் கட்டுபாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து தொழில்நுட்ப பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மின்சார ரயில்களுக்கான மின்விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 6 மின்சார ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இந்தத் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மணிநேரம் வரையில் தாம்பரம் வழித் தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. மாலை 3.30 மணிக்கு மேல் மின்சார ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்பட்டன.இதனிடையே, அரக்கோணம் காஞ்சிபுரம் தடத்தில் ரயில் சேவை மின்வயர் அறுந்து விழுந்ததால் அவ்வழியாக செங்கல்பட்டு ரயில்வே நிலையத்துக்கு வரக்கூடிய அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

இதில் குறிப்பாக தினசரி காஞ்சிபுரம் அடுத்த திருமால்பூரிலிருந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு காலை 8.10 மணிக்கு வரும் திருமால்பூர் விரைவு ரயில், அங்கிருந்து புறப்பட்டு இடையில் எங்கும் நிற்காமல் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்து சேரும்.இந்நிலையில் திருமால்பூர் விரைவு ரயில் செங்கல்பட்டு ரயில்வே நிலையத்துக்கு உரிய நேரத்தில் வராததால் வேறு வழியின்றி செங்கல்பட்டில் இருந்து தினசரி 8.40 மணிக்கு செல்லக்கூடிய அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் சென்னை கடற்கரை ரயிலை விரைவு ரயிலாக மாற்றியமைக்க இருப்பதாக ரயில் நிலையத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இந்நிலையில் மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, வண்டலூர் போன்ற பகுதிக்குச் செல்லும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அப்பயணிகள் நாங்கள் இந்த ரயிலில்தான் தினமும் செல்கிறோம்.

இந்த ரயிலில் சென்றால்தான் உரிய நேரத்தில் நாங்கள் பணிக்குச் செல்ல முடியும் ஆகையால் இந்த ரயிலை விரைவு ரயிலாக மாற்றக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று, வழக்கம்போல சாதாரண ரயிலாகவே இயக்கப்படும் என நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் ரயில் நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 6 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories