கோவை கோயில் முன்பு… இறைச்சி வீசிச் சென்ற ‘மர்ம நபர்கள்’!

coimbatore gopalasamy temple
coimbatore gopalasamy temple

கோவையில் கோவில் முன்பு மர்ம நபர்கள் இறைச்சியை வீசிச்சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப் பட்டுக் கிடக்கின்றன. கோயிலில் பூஜை செய்பவர்கள் முக்கிய பணியாளர்கள் மட்டுமே உள்ளே சென்று பூஜை செய்து வருகின்றனர்.

எனினும், பக்தர்களின் வழிபாட்டுக்காக, கோயில்களைத் திறந்து விட வேண்டும் என்று இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்து முன்னணி அமைப்பினர் இரு தினங்களுக்கு முன்னர் கோயில்களின் முன்பு தோப்புக்கரணம் போட்டு பொதுமக்கள் கவனத்தை ஈர்த்து, ஆலயங்களைத் திறந்து விடக் கோரினர்.

இந்நிலையில், கோவையில் ஒரு கோவிலின் முன்பு மர்ம நபர்கள் இறைச்சியை வீசிச்சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

meat in temple
meat thrown in front of a temple

கோவை டவுன்ஹாலை அடுத்த சலீவன் வீதியில் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவில் அமைந்துள்ளது. அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் வரும் இந்தக் கோவிலும், கொரோனா காரணமாக அடைக்கப்பட்டுள்ள சூழலில், இன்று காலை கோவில் கதவின் முன்பு இறைச்சியை ‘மர்ம நபர்கள்’ இருவர் வீசிச் சென்றுள்ளதாகக் கூறப் படுகிறது.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

இன்று காலை கோவில் முன்பு வந்த மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, அந்தப் பகுதியில் பைக்கில் வந்த இருவர் இவ்வாறு வீசிச் சென்றுள்ளதாக பூக்கள் கட்டி விற்கும் பெண்மணி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதை அடுத்து அந்தப் பகுதியில் சிசிடிவி கேமரா குறித்து விசாரிக்கப் பட்டதில், இந்தக் கோவிலில் சிசிடிவி கேமரா இல்லை என்றும், கோயில் கோபுரத்தை அடுத்த ராகவேந்திரர் கோயில் பிருந்தாவனத்தில் கேமரா உள்ளது என்றும் ஆயினும் அந்தக் கேமரா செயல்பாட்டில் இல்லை என்றும் அந்தப் பகுதியினர் தெரிவித்தனர்.

coimbatore gopalaswami temple police
coimbatore gopalaswami temple police

எனினும் அருகில் உள்ள அபார்ட்மெண்ட்களில் கேமராக்கள் நிறுவப் பட்டிருப்பதால், பைக்கில் வந்த மர்ம நபர்கள் குறித்து விரைவில் தகவல் தெரியவரும் என்று சொல் கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories